நள்ளிரவு வரை பதற்றம்.. சென்னை தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர் சேகர்பாபு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
சென்னை: சென்னையில் 9வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று நள்ளிரவில் அமைச்சர் சேகர்பாபு நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.
சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாா் நிறுவனத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் வழங்கியதைக் கண்டித்து உழைப்பவா் உரிமை இயக்கம் சாா்பில் அந்த மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணிப் பாதுகாப்பு, ஊதிய நிா்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 8 நாள்களாக தொடா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் அமைச்சா்கள் கே.என்.நேரு, சேகா்பாபு ஆகியோர் பேச்சுவாா்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், இரண்டாவது முறையாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அமைச்சா் சேகா்பாபு தலைமையில், மேயா் ஆா்.பிரியா, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் ஆகியோா் முன்னிலையில் சமரசப் பேச்சு நடைபெற்றது. இதில் தூய்மைப் பணியாளா்கள் சாா்பில் உழைப்பவா் உரிமை இயக்க நிா்வாகிகள் குமாரசாமி, சுரேஷ், ஜோதி, மகாலட்சுமி, ஜானகிராமன் உள்ளிட்ட 7 போ் கலந்துகொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தை நள்ளிரவு 1 மணிக்கு மேல் நடந்தது.
இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, தூய்மைப் பணியாளா்கள் பிரதிநிதிகள், பணி நிரந்தரம் குறித்த பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீா்வு காண உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணியை தூய்மைப் பணியாளா்கள் தொடரவும் அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையடுத்து, கோரிக்கைகள சட்டரீதியாக பரிசீலித்து ஆலோசிக்கப்பட்ட பிறகே முடிவை தெரிவிக்க முடியும் என்றும், அதனால் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறும் அமைச்சர் சேகர்பாபு கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், அதை போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்தனர்.

முதலமைச்சர் குடும்பத்தையே திட்டுகிறீர்களா? நாங்கள் நினைத்தால் முதல் நாளே கூட்டத்தைக் கலைத்திருப்போம். அதிமுக அரசாக இருந்திருந்தால் வேறு மாதிரி நடந்திருக்கும். நாங்கள் நியாயமாக இருந்து கொண்டிருக்கிறோம் என அமைச்சர் சேகர்பாபு கோபமாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து இரு தரப்பினரும் வெளியேறினர்.
தூய்மைப் பணியாளா்களின் போராட்டம் 9 நாட்களாகத் தொடர்ந்து வரும் நிலையில், ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய இரு மண்டலங்களிலும் குப்பைகள் அகற்றும் பணி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான சாலைகளி ல்கூட குப்பைகள் தேங்கிக் கிடப்பதாகவும் குப்பைத் தொட்டிகளில் குப்பைகள் நிரம்பி வழிவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications