இந்தியாவின் 2-வது தலைநகராக சென்னையை அறிவிக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்: ரவிக்குமார் எம்.பி.
சென்னை: இந்தியாவின் 2-வது தலைநகராக சென்னையை அறிவிக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று லோக்சபா எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தின் 2-வது தலைநகராக மதுரையை அறிவிக்க வேண்டும் என திடீர் கோரிக்கை எழுந்துள்ளது. ஆளும் அதிமுகவினரே இந்த கோரிக்கையை முன்வைத்தும் வருகின்றனர்.

மதுரை 2-வது தலைநகர்
அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டோர் இந்த கோரிக்கையை நியாயப்படுத்தி ஆதரவு தெரிவிக்கின்றனர். தமிழகத்தின் தலைநகரையே திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்பது 40 ஆண்டுகால பேசுபொருள். மறைந்த முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் திருச்சிக்கு தலைநகரை மாற்றுவது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

தலைநகரம் மாற்றம் ஏன்?
ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவர் சென்னைக்கு வந்து செல்ல 2 நாட்களாகிவிடுகிறது. இதனால்தான் மையமான திருச்சி பகுதிக்கு தலைநகரை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. திருச்சிக்கு பதிலாக மதுரைக்கு தலைநகரை மாற்றலாம் என்கிற யோசனையும் ஒருதரப்பால் முன்வைக்கப்பட்டது.

அந்த பழைய கோரிக்கை
இந்த நிலையில் திடீரென 2-வது தலைநகர் என்கிற புதிய கோரிக்கை எழுந்திருக்கிறது. இதன் சாதக பாதகங்கள் குறித்து தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதேபோக்கில் தமிழகத்தில் கிடப்பில் கிடக்கிற தமிழகத்தையே 2 மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை கூட சிலர் மீண்டும் எழுப்பி வருகின்றனர்.
Recommended Video

இந்தியாவின் 2-வது தலைநகராக சென்னை
தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் லோக்சபா எம்.பி.யான ரவிக்குமார் இன்னொரு புது கோரிக்கையை முன்வைக்கிறார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டுக்கு இரண்டாவது தலைநகர் தேவை என்கிறபோது இந்தியாவுக்குத் தேவையில்லையா? இந்தியாவின் இரண்டாவது தலைநகராக சென்னையை அறிவிக்கவேண்டும்.இதை தமிழக அரசு வலியுறுத்தவேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இந்த புதிய கோரிக்கை மீதும் விவாதங்கள் களைகட்டி உள்ளன.












Click it and Unblock the Notifications