சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் மொத்தமாக மாறிடுச்சு.. எப்படி இருக்கு பாருங்க! அடுத்த மாதமே வருது
சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் வரும் மார்ச் மாத இறுதிக்குள் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு பெரிதும் தீர்வு காணும் விதமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை கடற்கரை - தாம்பரம் ரூட்டில் உள்ள மிக முக்கியமான ரயில்வே ஸ்டேஷன்களில் ஒன்று பரங்கிமலை ரயில் நிலையம். செயிண்ட் தாமஸ் மவுண்ட் என்று அழைக்கப்படும் இந்த ரயில் நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியும். இதனால், இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் இருப்பதை காண முடியும். காலை மற்றும் மாலை பீக் நேரங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

சென்னையில் உள்ள மிக முக்கியமான வணிக பகுதிகளுக்கு இந்த ரயில் நிலையத்தில் இருந்து செல்ல முடியும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். செயிண்ட் தாமஸ் சர்ச் இந்த ஸ்டேசன் அருகே உள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் கூட பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
இது மட்டும் இன்றி சென்னையின் மெட்ரோ போக்குவரத்தும், மின்சார ரயில் போக்குவரத்தும் சந்திக்கும் பகுதியாக பரங்கி மலை உள்ளது. மேற்கொண்டு மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ வழித்தடம் பரங்கிமலை வழியாக செல்கிறது. தற்போது விரிவாக்க பணியில் உள்ள பறக்கும் ரயில் வழித்தடமும் பரங்கிமலையில் சந்திக்கிறது. இதனால் சாலை, ரயில், மெட்ரோ ரயில் போக்குவரத்தை இணைக்கும் போக்குவரத்து மையமாக பரங்கிமலை அமையவுள்ளது.
201 மின்சார ரயில்கள் இரு மார்க்கத்திலும் இந்த ஸ்டேஷனில் நின்று செல்கின்றன. 98 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்த ரயில் நிலையம் வழியாக செல்கிறது. இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 14.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாத இறுதிக்குள் இந்த பணிகளை முடிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
என்னென்ன வசதிகள்?
பயணிகள் கூட்டத்தை கணக்கில் கொண்டு ரயில் நிலையத்தின் நுழைவு வாயில்களும் விரிவுபடுத்தப்படுகின்றன. பயணிகளை கவரும் விதமாக அழகான வடிவமைப்புடன், வண்ணமய டிசைன்களுடன் அமைகிறது. புதிய புக்கிங் அலுவலகம் நவீன வசதிகளுடன் செய்யப்பட்டுள்ளன. நடைமேடையில் கூடுதல் பயணிகள் இருக்கை, கூடுதல் வாகனங்களை நிறுத்தும் அளவுக்கான பார்க்கிங் வசதி, பயணிகள் தகவல் தெரிவிக்கும் வகையில் டிஜிட்டல் பலகை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக சிசிடிவி கேமராக்கள் வசதி ஆகியவையும் அமைக்கப்படுகிறது. தற்போது பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில், வரும் மார்ச் மாதத்துக்குள் முழுப்பணியும் நிறைவடையும். இதன் மூலம் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications