மூக்கு பொடி சித்தர் கோயில் வாசலில் பகீர்.. சிவன் சொன்னதால் இளைஞரை கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம்
சென்னை: சென்னையில் காவல் நிலையத்தில் சரணடைந்த கொலையாளி ஒருவர் சிவபெருமான் உத்தரவின் பேரில் கொலை செய்ததாக கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை திருவான்மியூர் காவல் நிலையத்தில் நேற்று இரவு ஒருவர் தான் திருமுடி விநாயகர் கோயில் தெருவில் ஒருவரை கத்தியால் குத்தி கொன்றுவிட்டதாக கூறி சரணடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது பல அதிர்ச்சி தகவல்களை அளித்துள்ளார். சரணடைந்த நபர் திருவான்மியூர் குப்பம், ஜெயராம் தெருவை சேர்ந்த கமல் உஸ்மான் (48) என தெரியவந்தது. இவர் மீனவ குப்பத்தில் தனியாக வசித்து வருகிறாராம்.
20 ஆண்டுகளுக்கு முன்பே இவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டாராம். 2011ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கமல் உஸ்மான் தீவிர சிவ பக்தராக மாறிவிட்டார். இதனால் அவர் தினமும் அந்த பகுதியில் உள்ள மூக்கு பொடி சித்தர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்த நிலையில் திருவான்மியூர் பகுதியை சேர்ந்த பெயிண்டர் செந்தில் குமார் (40).

இவர் தினமும் பெண்களை அழைத்து வந்து கோயில் வாசல் முன்பு பேசி வருவது வழக்கமாம். இது உஸ்மானுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனால் செந்தில் குமார் நல்லவர் கிடையாது, அவர் கெட்டவர் என உள் மனசு சொல்லியதால் இதுகுறித்து கடவுளிடம் அவர் முறையிட்டாராம். அப்போது கடவுள், செந்தில் குமார் கெட்டவர் என்றால் அவரை கொன்றுவிடு என சொன்னாராம்.
இதையடுத்து வீட்டில் தீட்டி வைத்திருந்த கத்தியை எடுத்துக் கொண்டு செந்தில் குமாரிடம் சென்ற உஸ்மான் 10 -க்கும் மேற்பட்ட இடங்களில் குத்தி கொலை செய்துவிட்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார் செந்தில் குமாரின் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடவுள் கூறியதால் ஒருவரை கொலை செய்ததாக கூறிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள்












Click it and Unblock the Notifications