என்னா ஸ்பீடு.. சென்னை - மைசூர் புல்லட் ரயில் பணிகள் தொடங்கியது.. சென்னையில் எடுக்கப்படும் நிலம்!
சென்னை: சென்னை - பெங்களூர் - மைசூர் நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் திட்டத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, சென்னையில் இதற்கான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் அடுத்த சில வாரங்களில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புல்லட் ரயில் பாதை அமைப்பு
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, கையகப்படுத்தப்பட வேண்டிய நிலங்களின் விவரங்களை சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், நில உரிமையாளர்களுக்கு முதற்கட்ட அறிவிப்புகள் அனுப்பப்பட்டு உள்ளன.
இந்த புல்லட் ரயில் திட்டம், சென்னை, பெங்களூர் மற்றும் மைசூர் ஆகிய நகரங்களை தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள ஒன்பது நிலையங்கள் வழியாக இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் புல்லட் ரயில் நிலையம்
சென்னையில் அமைக்கப்படவுள்ள புல்லட் ரயில் நிலையமானது, சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள ராஜா முத்தையா சாலையில், முழுவதும் பூமிக்கு அடியில் (Underground) அமைய உள்ளது. இந்த நிலையம், மெட்ரோ ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுடன் இணைக்கப்படுவதால், அந்த பகுதியே மிகப்பெரிய போக்குவரத்து மையமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "சென்ட்ரல் ரயில் நிலையம் ஏற்கனவே ஒரு முக்கியமான போக்குவரத்து மையமாக உள்ளது. புல்லட் ரயில் நிலையம் அமைக்கப்பட்டால், இப்பகுதி மேலும் வளர்ச்சி அடையும்" என்றனர்.
நிலம் கையகப்படுத்தும் பணி
இந்த ஆண்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்த ரயில் சென்னை சென்ட்ரல் அருகே பூந்தமல்லி, அரக்கோணம், சித்தூர், பங்காரப்பேட்டை, பெங்களூர், சென்னபட்னா, மாண்டியா மற்றும் மைசூர் மார்க்கம் வழியாக செல்லும். இந்த திட்டத்தின் முக்கிய புள்ளிவிவரங்கள்
முக்கிய விவரங்கள்
முன்மொழியப்பட்ட தூரம் 435 கி.மீ
அதிகபட்ச வேகம் 350 கி.மீ
செயல்பாட்டு வேகம் 320 கி.மீ
சராசரி வேகம் 250 கி.மீ
பாதையின் அகலம் 1435 மிமீ
ரயில் திறன் 750 பயணிகள்
பாதுகாப்பு அம்சங்கள்
புல்லட் ரயில் பாதையில் நிலநடுக்கம் ஏற்பட்டால், அதனை உணர்ந்து தானாகவே ரயிலை நிறுத்தும் அதிநவீன தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கம் கண்டறியும் எச்சரிக்கை அமைப்பும் (யுரேடாஸ்) நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.
நிலையங்களின் விவரம்
இந்த ரயில் மொத்தம் 9 நிலையங்களில் நின்று செல்லும். அவை:
சென்னை
பூந்தமல்லி
அரக்கோணம்
சித்தூர்
பங்காரப்பேட்டை
பெங்களூர்
சென்னபட்னா
மாண்டியா
மைசூர்
மேலும், சென்னை மற்றும் பெங்களூரை இணைக்கும் அதிவிரைவு சாலைக்கு அருகில் இந்த புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம்
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமான மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதை (MAHSR) திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திட்டம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களை இணைக்கும் ஒரு முக்கியமான போக்குவரத்து திட்டமாகும்.
முதலில் ஏப்ரல் 2020 இல் கட்டுமானத்தை தொடங்க திட்டமிடப்பட்டது, மேலும் டிசம்பர் 2023 இல் திட்டம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மகாராஷ்டிராவில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், முழு நடைபாதையும் முடிவடையும் தேதி இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும் குஜராத் வழியாக 352 கிமீ தூரத்தில் 50 கிமீ தூரத்தை ஆகஸ்ட் 2026ல் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சூரத்திலிருந்து பிலிமோரா வரையிலான இந்த திட்டம் 2027-ல் முழுமையாக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, சென்னை - பெங்களூர்- மைசூர் புல்லட் ரயில் திட்டம் தென்னிந்தியாவின் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
வணிக காஸ் சிலிண்டர் ரூ.5000, 6000 என விற்பனை.. சென்னை,கோவையில் மூடப்படும் ஏராளமான உணவங்கள் -
சென்னை மாதவரத்தில் 46 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்!












Click it and Unblock the Notifications