Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிக்கிழமை இரவு.. மறந்தும் அந்த தப்பு செஞ்சுடாதீங்க.. சென்னை போலீஸ் அதிரடி திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனிக்கிழமை இரவு போதையில் வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை பாயப்போகுது.. சென்னை போக்குவரத்து போலீசார் அதிரடி திட்டம் வகுத்துள்ளார்கள். எனவே சென்னை மற்றும் புறநகரில் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் இரவு 12 மணி வரை சரக்கு அடிச்சிட்டு வாகனத்தில் போனால் கண்டிப்பாக அபராதம் உறுதியாகிவிடும்.

சென்னை போலீசார் பொதுவாக போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது தினசரி நடவடிக்கை எடுப்பார்கள். அது எப்படிஇருக்கும் என்றால் மிகவும் வழக்கமான அதாவது நர்மலான நடவடிக்கையாக இருக்கும்.

Chennai Traffic Police Strict action will be taken against drunken drivers on Saturday night

தினசரி சோதனை நடத்தும் இடங்களில் நடத்தி விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இரவு நேரங்களில் ஒரு போலீஸ் நிலைய எல்லையில் ஒரு இடம் என்கிற அளவில் எங்காவது சோதனை செய்வார்கள். பழைய குற்றவாளிகள் சிக்கினால் பிடிப்பார்கள். சந்தேகத்திற்கு இடமான வகையில் செல்வோரை பிடித்து விசாரிப்பார்கள்.

மது அருந்திவிட்டு செல்வோரை பிடித்தால் அபராதம் விதிப்பார்கள். கார்களில் செல்வோர் தாருமாறாக சென்றாலோ, சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்தாலோ பிடித்து சோதனை செய்து குடிபோதையில் இருக்கிறார்களா என்று பார்ப்பார்கள். காரில் ஏதேனும் கடத்தல் பொருட்கள் இருக்கிறதா என்பதை பார்ப்பார்கள். அப்படியான விஷயம் இருந்தால் அதற்கான நடவடிக்கை எடுப்பார்கள். இது எல்லாம் சென்னையில் தினசரி நடக்கும் எதார்த்தமான செயல்கள்.

ஆனால் வார இறுதியில் அவர்கள் நடவடிக்கையே வேறு மாதிரி இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அதிரடியாக சோதனையில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் வழக்கமான சோதனை மற்றும் நடவடிக்கையுடன், இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு வழிப்பாதையில் எதிர்திசையில் வாகனம் ஓட்டிச்செல்வோர் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்று கூறுகிறார்கள்.

இதனிடையே நாளை (சனிக்கிழமை) இரவு 8 மணி முதல் 12 மணி வரை போதையில் வாகனம் ஓட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லையிலும் 3 இடங்களில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்க போகிறார்களாம். பழைய வழக்குகளில் தொடர்புடைய அபராத தொகையை தீவிரமாக வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம். இந்த ஒரு நடவடிக்கை மட்டும் வழக்கமாக சனிக்கிழமைகளில் செய்யப்படுவது தான்.

ஆனால் நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுவாக அனைத்து குற்றங்கள் தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளார்கள். எனவே ஹெல்மெட் அணியாமல் சென்றாலோ, இரவில் போதையில் சென்றாலோ, மூன்று பேர் ஒரே வாகனத்தில் சென்றாலோ, இன்சூரன்ஸ் இல்லாத வாகனத்தில் சென்றாலோ, காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றாலோ, மது போதையில் கார் ஓட்டினாலோ கண்டிப்பாக அபராதம் விதிப்பார்கள். சோதனைகள் ஞாயிறுகளில் தீவிரமாக இருக்கும் என்பதால் யாருமே தப்பிக்க முடியாது.

சிம்பிளாக சொல்வது என்றால் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிறு வரை சோதனைகள் கடுமையாக இருக்கும். மதுபோதையில் செல்வோர் இந்த நாட்களில் தான் அதிகம் என்பதால் அவர்களை விரட்டி விரட்டி பிடித்து கண்டிப்பாக அபராதம் விதிப்பார்கள். ஏனெனில் மது போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுவதை தடுக்கவே போலீசார் சோதனையை தீவிரப்படுத்த உள்ளார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+