சென்னையை ஆட்டிப்படைக்கும் தண்ணீர் பஞ்சம்.. சமாளிக்க முடியல.. 4000 ஹோட்டல்களை மூட முடிவு!
Recommended Video
சென்னை: சென்னையை ஆட்டிப்படைக்கும தண்ணீர் பஞ்சத்தால் 4000 ஹோட்டல்களை மூட அதன் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இதனால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் திடீரென உயர்ந்தது.
இதன்தொடர்ச்சியாக கடந்த 4 ஆண்டுகளாக சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை என்ற பேச்சே இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

4000 ஹோட்டல்கள் மூட முடிவு
தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் மட்டுமின்றி வர்த்தக நிறுவனங்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக சென்னையில் 4000 ஹோட்டல்களை மூட ஹோட்டல் உரிமையாளர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மதிய சாப்பாடு நிறுத்தம்
ஏற்கனவே சென்னை நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான உணவகங்கள் தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. பல மதிய சாப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.

வெளியூர் இளைஞர்கள்
சென்னையில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பணி நிமித்தமாக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் தனியாக வீடு எடுத்தும் தங்கும் விடுதிகளிலும் தங்கியுள்ளனர்.

உணவங்களை நம்பியே
அவர்களின் பசியை போக்குவது உணவகங்கள்தான். ஒருநாள் உணவகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலே அவர்களின் நிலைமை திண்டாட்டம் ஆகிவிடும்.

சமாளிக்க முடியவில்லை
இந்நிலையில் சென்னையில் மேலும் 4000 ஹோட்டல்கள் மூடப்படும் என தகவல் வெளியாகியிருப்பது பலரின் வயிற்றில் புளியை கரைக்க தொடங்கியுள்ளது. உணவகங்களில் உள்ள மோட்டார்களில் தண்ணீர் வராத நிலையில் தனியார் தண்ணீர் லாரிகளுக்கும் தற்போது கிராக்கி ஏற்பட்டுள்ளதால் உணவக உரிமையாளர்கள் இந்த முடிடிவ எடுத்துள்ளனர்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications