மக்களே கவனம்.. அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம்
சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்கிறது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் விட்டு விட்டு மழை பெய்தது.

அதிகாலையில் மழை
அது போல் சென்னையிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் மக்கள் தீபாவளியை கொண்டாட முடியாமல் அவதிப்பட்டனர். இந்த நிலையில் சென்னையில் இன்று அதிகாலையிலிருந்தே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மிதமான மழை
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும்.

பரவலாக மழை
இன்று அதிகாலை தொடங்கிய மழை சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்தது. சென்னை அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தி நகர், கிண்டி, அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், கொளத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

10 மாவட்டங்கள்
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications