6 மாதங்களுக்கு பிறகு சென்னையில் மழை பெய்கிறது... மகிழ்ச்சி பொங்குகிறது
Recommended Video
சென்னை: சென்னையில் காலை முதல் வெயில் கொளுத்திய நிலையில் திடீர் மழை பெய்தது. மழையோடு, மண் வாசம் வீசியது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கடும் வெயிலிலிருந்து தப்பிக்கவும், குடிநீர் பஞ்சத்தில் இருந்து மீளவும், மழையை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு திடீரென்று இன்று மழை பெய்ததால், வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் மழையில் நனைந்தபடி ஜாலியாக சென்றனர்.

சென்னையில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்யாமல் இருந்ததால், மக்கள் தவித்து போயினர். கடந்த சில நாட்களாக அவ்வப்போது சென்னையில் மழை பெய்வது போல் மேகமூட்டங்கள் காணப்பட்டாலும் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த நிலையில், இன்று சென்னையில் குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, தரமணி, பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. கருமேகங்கள் சூழ்ந்து இதமான காற்றுடன் பெய்த மழையால் மக்கள் மனம் குளிர்ந்தது. வெப்பமும் தணிந்தது. மழை நீரைக் கண்ட சிறுவர்கள், உற்சாகத்தில் ஆட்டம் போட்டனர். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் கனமழை பெய்தது. கனமழையால் சாலை ஓரம் தண்ணீர் தேங்கியது.
இதனை சமூகவலைதளங்களில் #chennairains என்ற ஹேஷ் டேக்கை இந்திய அளவில் டிரெண்டாக்கி உள்ளனர். பலர் மழையை வீடியோ, புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அய்யோ பாத்துட்டேன்...பாத்துட்டேன் "மழைய" பாத்துட்டேன்...அடேய்ய்...பாத்தது நீதானா..நீ பாத்தேன்னு சொன்னா எவனாது நம்புவானா....🙏🙏🤗🤗💝💝🌿🌿😍😍#chennairains pic.twitter.com/9FsNZ26CKe
— Vikrammech (@Vikki14Vikram) June 20, 2019
அய்யோ பாத்துட்டேன்...பாத்துட்டேன் "மழைய" பாத்துட்டேன்...அடேய்ய்...பாத்தது நீதானா..நீ பாத்தேன்னு சொன்னா எவனாது நம்புவானா. என்று பதிவிட்டுள்ளார்.
மழை நல்ல இருக்கியா மழை என்று வடிவேல் ஸ்டைலில் கேட்பது போல், மீம்ஸ்களை அள்ளி தெளித்து வருகின்றனர்.
Love #chennairains pic.twitter.com/PXI89vt8n4
— Hari (@Hari7dx) June 20, 2019
அதே நேரம், அரசை நீர்நிலைகளை பாதுகாக்க சொல்வது போல், நாமும் நீரை சேமிப்போம் என்றும் சிலர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
அரசை நீர்நிலைகளை பாதுகாக்க சொல்வது போல்.. நாமும் நீரை சேமிபோம் #chennairains pic.twitter.com/rN7qeLtfjR
— Memes Tamizha (@memes_tamizha) June 20, 2019
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications