அண்ணாந்து பார்க்க போறீங்க.. சென்னையிலேயே மிகப்பெரிய மால்.. எங்கே வருது தெரியுமா? பின்னணி
சென்னை: பிரஸ்டீஜ் குழுமம் சென்னையில் உருவாக்கி வரும் ஃபோரம் ஒன் ஓஎம்ஆர் வணிக வளாகம் 2027-ல் பொதுமக்களுக்குத் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பெருங்குடியில், பழைய மகாபலிபுரம் சாலையில் (ஓஎம்ஆர்) அமைந்துள்ளது. இதற்கான சைட் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஃபோரம் ஒன் ஓஎம்ஆர் வணிக வளாகம்
சுமார் 19.6 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மாலில் 300 கடைகள் அமைக்கப்பட உள்ளன. ஹோட்டல்கள், அலுவலகங்கள் இதில் அமைக்கப்பட உள்ளன. நிறைவடையும்போது, இது சென்னையின் மிகப்பெரிய வணிக வளாகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆங்கர் கடைகள், தியேட்டர்கள், உணவு வளாகங்கள் இங்கே அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஃபோரம் ஒன் ஓஎம்ஆர் வளாகத்தில் 1,781 இருக்கைகள் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கம், 166 அறைகள் கொண்ட ஹோட்டல் மற்றும் 10.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் சில்லறை விற்பனைக் கடைகள் அமைய உள்ளன. அடித்தளத்தில் இரண்டு தளங்களில் வாகன நிறுத்துமிடம் உள்ளது. ஐந்து மாடிக் கட்டிடத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கும். தரை தளம், முதல் தளம் மற்றும் மேல் தளங்களில் சில்லறை விற்பனை கடைகள் இருக்கும். திரையரங்கம் 2 மற்றும் 4-வது தளங்களில் அமைந்துள்ளது. ஹோட்டல்கள் 5-வது தளத்தில் இருக்கும்.
பிரஸ்டீஜ் குழுமம் 'ஃபோரம் மால்ஸ்' என்ற பெயரில் பல வணிக வளாகங்களை நடத்தி வருகிறது. மேலும், அடுத்த நான்கு ஆண்டுகளில் எட்டு புதிய வணிக வளாகங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதில் ஓஎம்ஆர், பெருங்குடியில் அமையவுள்ள இந்த வணிக வளாகம் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபோரம் ஒன் மாலில் உள்ள வசதிகள்
இந்த வணிக வளாகத்தில் கீழ்க்கண்ட வசதிகள் இடம்பெறும்:
மருத்துவ உதவி
குழந்தைகள் உணவு அருந்தும் அறை
தொலைந்த பொருட்கள் மீட்பு சேவை
குழந்தைகள் உடை மாற்றும் அறை
சக்கர நாற்காலி
பைக் ஸ்பா
தொழுகை அறை
தகவல் மையம்
24 மணி நேர பாதுகாப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை
இலவச வைஃபை
பிரீமியம் பார்க்கிங்
ஷூக்கள் பழுது பார்க்கும் வசதி
முதல் உதவி
ஏடிஎம்
ஆம்புலன்ஸ்
ஃபோரம் மாலில் வெஸ்ட்ஸைடு, லைஃப்ஸ்டைல், ஆர்.எம்.கே.வி, வியா சவுத், ஃபேப் இந்தியா, ஸ்பார் ஹைப்பர் மார்க்கெட் போன்ற பல பிராண்டுகளின் கடைகள் இருக்கும்.
ஃபோரம் மால் சென்னையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், பேஷன் ஷோக்கள் மற்றும் சமூக நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் ஃபோரம் ஒன் சென்னை திறக்கப்படும் தேதி பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். திறப்புக்குப் பிறகு சென்னையின் மிகப்பெரிய வணிக வளாகமாக இது இருக்கும்.
ஃபோரம் ஒன் ஓஎம்ஆர் திறக்கப்பட்ட பிறகு, சென்னை நகரத்தின் வணிகச் சூழலில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலதரப்பட்ட வசதிகளுடன் இது ஒரு முக்கியமான பொழுதுபோக்கு மற்றும் வணிக மையமாக மாறும்.
இன்னொரு மால்
ஏற்கனவே சென்னை அசோக் நகரில் பெரிய மால் வர உள்ளது. சென்னை அசோக் நகர் பகுதியில் மிகப்பெரிய 22 அடுக்கு மாடி கட்டப்பட்டு வருகிறது . இடையில் நிறுத்தப்பட்டு இருந்த கட்டுமானம் மீண்டும் தொடங்கி உள்ளது. வேகமாக சென்று வரும் கட்டுமானம் தற்போது 17 மாடிகளை கடந்து கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
சென்னையின் இந்த பகுதியில் பிரம்மாண்ட மால் வர உள்ளது. இதை யார் காட்டுகிறார்கள் என்று தெரிந்தால் நீங்கள் ஷாக் ஆகிடுவீர்கள். தமிழ்நாடு அரசின் ஹவுசிங் போர்ட் மூலம் இந்த குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. ஒயின் கிளாஸ் வடிவத்தில் தோன்றும் 22-அடுக்கு அமைப்பு, அசோக் பில்லரில் உள்ள ட்ரை-ஜங்ஷன் ப்ளாட்டில் கட்டப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் சதுர அடி இடத்தில் 24,000 சதுர அடி அளவு கொண்ட மாலுக்கு ஒதுக்கப்படும். மற்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைக்கப்படும். ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பின் அளவும் 1,700 சதுர அடி மற்றும் 2.13 ஏக்கர் நிலத்தில் முழு கட்டமைப்பையும் கட்ட 227.26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுமானத்தில் தற்போது 20 மாடிகள் வரை கட்டப்பட்டு உள்ளது. ட்வின் டவர் என்பதால் இன்னொரு டவரும் உடன் கட்டப்பட உள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications