சிதம்பரம் நடராஜர் கோவிலில் யார் பெரியவர் என்ற பிரச்சினையில்லை.. சொல்கிறார் சேகர்பாபு
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள், இந்து சமய அறநிலையத்துறை இடையே யார் பெரியவர்கள் என்ற பிரச்சினை இல்லை என்று கூறினார். பக்தர்கள் வழிபடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதுதான் எங்களுடைய நோக்கம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி மாத திருமஞ்சன தரிசனத்தையொட்டி கடந்த 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 4 நாட்கள் கனகசபையில் (சிற்றம்பல மேடையில்) ஏறி வழிபட கோயில் தீட்சிதர்கள் தடை விதித்து, அதுதொடர்பான அறிவிப்பு பலகையை வைத்தனர். இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த 24ஆம் தேதி இந்து சமய அறநிலைத்துறையினர் காவல்துறையினர் உதவியோடு அறிவிப்பு பலகையை அகற்ற சென்றபோது, தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், கடந்த 26ஆம் தேதி மாலை போலீஸ் பாதுகாப்புடன் அறிவிப்பு பலகை அகற்றப்பட்டது. அதன் பின்னரும் கனகசபை மீது ஏறி வழிபட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் தீட்சிதர்கள் சட்டத்தை மீறி செயல்படுவதாக கூறிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். பக்தர்களிடம் இருந்து அதிக கோரிக்கை வருவதால் நடராஜர் கோவிலை அறநிலையத்துறை வசம் கொண்டு வரும் எண்ணம் இருப்பதாக கூறினார்.
பிரச்சினை ஓய்ந்த நிலையில் நேற்றைய தினம் கனகசபை மீதேறி பக்தர்கள் நடராஜரை வழிபட்டனர்.இதனையடுத்து காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபுவிடம் சிதம்பரம் நடராஜர் கோயில் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சேகர்பாபு, சிதம்பரம் நடராஜர் கோயிலை பொறுத்தளவில் சட்டப்படி பக்தர்களின் சுதந்திரமான இறைவழிபாட்டிற்கு அனைத்து உதவிகளையும் இந்து சமய அறநிலைத்துறையும், தமிழக அரசும் செய்யும் என்று கூறினார். இதில் யார் பெரியவர் என்ற பிரச்சினையே இல்லை. இறையன்பர்கள் தெய்வத்தை வழிபடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதுதான் எங்களுடைய நோக்கமாகும் என்றும் சேகர்பாபு தெரிவித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications