மகளிர் வாழ்வில் மாபெரும் புரட்சி.. தமிழ்நாட்டை தலைநிமிர வைக்கும் பட்ஜெட் இது.. முதல்வர் பாராட்டு!
மகளிர் உரிமைத் தொகை திட்டம் மகளிர் வாழ்வில் புரட்சியை ஏற்படுத்தும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: மின்மினிப் பூச்சி போன்றது நிதிநிலை அறிக்கை என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மகளிர் வாழ்வில் மாபெரும் புரட்சியை மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஏற்படுத்தும் என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இருண்ட காலத்தை வழங்கிய எடப்பாடி பழனிசாமி உதயசூரியன் ஒளியை பார்க்க முடியாமல் தவிப்பதாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் அனைவரும் எதிர்பார்த்த வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆனால் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் அறிக்கை
அந்த அறிக்கையில், எல்லோருக்கும் எல்லாம் என்ற திசை நோக்கி தமிழக அரசின் பயணம் தொடரும், வெல்லும். தமிழக பட்ஜெட் திராவிட மாடல் கருத்தியலை முழுமையாக உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை உரிய காலத்தில் முடித்து மக்களுக்கு வழங்க அமைச்சர்கள், அதிகாரிகள் அயராது பாடுபட வேண்டும்.

தலைநிமிர வைக்கும் பட்ஜெட்
அனைத்து மக்களுக்கும் உதவி செய்யப்போகும் பல்வேறு நலத்திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மக்கள் வாழ்வில் மாபெரும் புரட்சியை மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஏற்படுத்தும். திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி, வேளாண் உற்பத்தி பெருகியுள்ளது. தமிழ்நாட்டை தலை நிமிர வைக்கும் நிதிநிலை அறிக்கை இது என்ரு பாராட்டு தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம்
தொடர்ந்து, மின்மினிப் பூச்சி போன்றது நிதிநிலை அறிக்கை என்று கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டின் உள்ளடக்கங்களை அறியும் பக்குவம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. அதிமுக ஆட்சியில் இருந்த இருண்ட கால நிதிநிலையை சீர்செய்து முன்னேற்றி முற்போக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உதயசூரியன் ஒளி
இருண்ட காலத்தை தமிழ்நாட்டுக்கு வழங்கிய பழனிசாமியால் உதயசூரியன் ஒளியை பார்க்க முடியாமல் தவிர்ப்பதையே அவரது பேட்டி உணர்த்துகிறது. நிதிநிலை மட்டும் சீராக இருந்திருக்குமானால் இன்னும் பல திட்டங்களை தீட்டியிருக்க முடியும். தமிழ்நாட்டை நோக்கி ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications