உப்புமா கதை..2024ல் இந்தியாவிற்கே விடியல்..தேர்தலுக்கு தயாராகுங்கள்.. முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
77% பேர் சாப்பிடும் உணவை தராமல் 23% சாப்பிடும் உப்புமாவை தரும் கதைதான் நாட்டில் நடக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:
நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் பிரதமர் மோடி பதில் சொல்லவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 77% பேர் சாப்பிடும் உணவை தராமல் 23% சாப்பிடும் உப்புமாவை தரும் கதைதான் நாட்டில் நடக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 2021ல் தமிழகத்தில் விடியல் ஏற்பட்டது போல், 2024ம் ஆண்டு இந்தியாவுக்கே விடியல் வரப்போகிறது. லோக்சபா தேர்தலுக்கு தயாராகுங்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதியின் இல்ல திருமண விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய அவர், 'தமிழ் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு, தலையெழுத்தை மாற்றியது கலைஞர் பேனா.

கலைஞரின் பேனா தலை குனிந்தபோதெல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது. வள்ளுவர் கோட்டத்தை உருவாக்க பாடுபட்ட பேனாதான் கலைஞர் பேனா. டைடல் பார்க் அமைக்க கையெழுத்து போட்டது தான் கலைஞர் பேனா. குடிசைகளை மாற்றி அடுக்குமாடி குடியிருப்புகளை வித்திட்டது கலைஞர் பேனா. பூம்புகாரை உருவாக்க திட்டமிட்டு அதற்கு கையெழுத்திட்டது கலைஞரின் பேனா. லட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்க காரணமாக இருந்ததும் கலைஞரின் பேனா தான் என்று குறிப்பிட்டார்.
ரூ.15 லட்சம் போடுவதாக பிரதமர் மோடி கூறினாரே. ரூ.15ஆவது போட்டீர்களா?. சேது சமுத்திர திட்டங்கள் குறித்து கேட்டதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்கவில்லை.ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக பிரதமர் மோடி கூறியது குறித்து கேட்டால் பதில் இல்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டதே?என்ன ஆனது?. கனிமொழி, டி.ஆர். பாலு உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை.
77% பேர் சாப்பிடும் உணவை தராமல் 23% சாப்பிடும் உப்புமாவை தரும் கதைதான் நாட்டில் நடக்கிறது. கருப்புப் பணத்தை மீட்போம் என்றார் பிரதமர். அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. 2021ல் தமிழகத்தில் விடியல் ஏற்பட்டது போல், 2024ம் ஆண்டு இந்தியாவுக்கே விடியல் வரப்போகிறது.2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள், என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக சிவா எம்.பி சில நாட்களுக்கு முன்பு லோக்சபாவில் பேசிய உப்புமா கதை இரு அவைகளிலும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. ஒரு கல்லூரி விடுதியில் தினந்தோறும் மாணவர்களுக்கு உப்புமாவை ஹாஸ்டல் நிர்வாகம் வழங்கி வருகிறது. உப்புமாவை மாணவர்கள் உண்ண முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். அணைத்து மாணவரக்ளும் சேர்ந்து விடுதி நிர்வாகத்திடம் முறையிட்டு, போராட்டத்தை நடத்த முடிவு செய்து உள்ளனர்.
விடுதி மாணவர்கள், நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு அழைத்து அவர்களது வேண்டுகோளை கேட்டு உள்ளனர். அப்போது மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு உப்புமா வேண்டாம் எனவும், அதற்கு மாற்றாக வேறு உணவு வேண்டும் எனவும் கேட்டு உள்ளனர்.
விடுதி நிர்வாகம் என்ன உணவு வேண்டும் என ஒரு வாக்கெடுப்பு நடத்தி உள்ளது. அந்த வாக்கெடுப்பில், 7 சதவீத மாணவர்கள் ஆம்லெட் வேண்டும் என கேட்டனர். 18 சதவீதம் பேர் ஆளு பரோட்டா வேண்டும் எனவும், 13 சதவீத மாணவர்கள் பூரிக்கும் வாக்களித்தனர்.
20 சதவிகித பேர் மசாலா தோசை வேண்டும் எனவும், 19 சதவீத பேர் இட்லி வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். 23 சதவீத மாணவர்கள் உப்புமாவிற்கே மீண்டும் வாக்கு அளித்துள்ளனர். இதனால் அதிக வாக்கு பெற்று உப்புமா ஜெயித்து விட்டது.
விடுதி நிர்வாகமும் மீண்டும் உப்புமாவையே தரலாம் என முடிவு எடுத்து விட்டது. இது போலத்தான் பாஜகவின் கதையும். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இல்லாததால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டது. ஆனால் இந்த முறை அது நடக்காது. எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்கும் என்று கூறினார். அதை நினைவூட்டும் வகையில் முதல்வர் ஸ்டாலின், 77% பேர் சாப்பிடும் உணவை தராமல் 23% சாப்பிடும் உப்புமாவை தரும் கதைதான் நாட்டில் நடக்கிறது என்றும் 2024ஆம் லோக்சபா தேர்தலில் நாட்டிற்கே விடியல் வரும் என்றும் கூறியுள்ளார்.
-
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து! -
வெயிட்டாக எதிர்பார்க்கும் காங்., அசைந்து கொடுக்குமா அறிவாலயம்? லிஸ்டோடு தவிக்கும் கதர் கட்சியினர்!












Click it and Unblock the Notifications