Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொள்ளாச்சி.. கொடநாடு கொள்ளை! சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் செக்! எடப்பாடிக்கு ஷாக் கொடுக்கும் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை : சட்டம் ஒழுங்கு குறித்து இம்மாமன்றத்தில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. குற்றச்சாட்டு சொல்வதாக இருந்தால் அதனை ஆதாரத்தோடு சொல்ல வேண்டும். பொத்தாம் பொதுவாகச் சொல்லக் கூடாது என தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் 2023ஆம் ஆண்டுக்கான முதல்வர் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 9ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதற்கு அடுத்த நாள் பல்வேறு பிரபலங்கள், முன்னாள் சபை உறுப்பினர்களுக்கு இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் இறுதி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார். அந்த உரையின் போது பல அறிவிப்புகள், பதில்களும் இருந்தது.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

தனது உரையில் சட்டம் ஒழுங்கு குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்," தாய்த் தமிழ்நாட்டைக் காக்க ஒப்படைத்துக் கொண்டு தூங்காமை கல்வி துணிவுடமை ஆகிய மூன்றையும் முறைமேற்கொண்டு முறைசெய்து வெல்லும் திராவிட மாடல் ஆட்சியானது நடைபெற்று வரும் வேளையில் மகிழ்ச்சியான மனநிலையில் இந்த மாமன்றத்தில் நான் கம்பீரமாக நிற்கிறேன். சமூகநீதி சுயமரியாதை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம். பெண்ணுரிமை மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சியானது விரத்துடனும் விவேகத்துடன் நடைபெற்று வருகிறது என்பதை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியத் துணைக்கண்டமே இப்போது உணர்ந்துவிட்டது.

திராவிட மாடல் ஆட்சி

திராவிட மாடல் ஆட்சி

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், சமத்துவப் போராளி அண்ணல் அம்பேத்கர் பெருந்தலைவர் காமராசர். அறிஞர்களுக்கெல்லாம் பேரறிஞர் அண்ணா மேசையைத் தட்டும் ஒலி எங்களை எல்லாம் ஆளாக்கி அழகு பார்த்த நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், மேசையைத் தட்டும் ஒலி இவர்களது கொள்கைகளையும், இலட்சியங்களையும் கொண்டு செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே இந்த திராவிட மாடல் ஆட்சி,

 சட்டம் ஒழுங்கு

சட்டம் ஒழுங்கு

இருபது மாதங்களைக் கடந்திருக்கிறது கழக அரசு. அதற்குள் இமாலய சாதனைகளைச் செய்திருக்கிறோம். நாம் கடந்துள்ள காலம் குறைவுதான். ஆனால் ஆற்றியுள்ள பணிகள் அதிகம். அதேநேரத்தில் இந்த இருபது மாத காலம் போனதே தெரியவில்லை. சட்டம் ஒழுங்கு குறித்து இம்மாமன்றத்தில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. குற்றச்சாட்டு சொல்வதாக இருந்தால் அதனை ஆதாரத்தோடு சொல்ல வேண்டும். பொத்தாம் பொதுவாகச் சொல்லக் கூடாது.

 பொள்ளாச்சி சம்பவம்

பொள்ளாச்சி சம்பவம்

மதக் கலவரங்கள் நடந்துள்ளதா? சாதிக் கலவரங்கள் நடந்துள்ளதா? சொல்லுங்கள். பொது மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடதுள்ளதா? அப்பாவி உயிர்கள் பறிபோனதா? நெஞ்சை உலுக்கக்கூடிய பொள்ளாச்சி சம்பவமும், மர்மத்தின் உச்சமாய் விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய கொடநாடு கொலைகளும் கொள்ளைகளும் யாருடைய ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தன என்பதை மக்களும் நன்கு உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்காவது நடந்த குற்றச் சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லையா? சொல்லுங்கள். காவல் துறை அவர்களது கடமையை சிறப்பாக செய்து வருகிறது. அதைச் சொல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்ட குற்றங்களைப் பேசுவதால் என்ன பயன்?

தமிழ்நாடு

தமிழ்நாடு

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை திறம்பட நிலைநாட்டிட இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அரசின் சீரிய நடவடிக்கைகளினால் தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. அதன் காரணமாகவே, பல்வேறு நாடுகளிலிருந்து தொழில் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டினைத் தேடி வந்து இங்கே முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டில் மதவாத, இனவாத தீவிரவாத சக்திகளை ஒருபோதும் இந்த அரசு வளரவிடாது. எந்தவொரு வன்முறையும் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து திகழும்" என பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+