பணம் கொடுக்கல் வாங்கல் புகார்கள்.. டிஜிபிக்கு தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் கடிதம்
சென்னை: பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான புகார்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் மோசடி குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என, காவல் துறையினருக்கு அறிவுறுத்தும்படி, காவல்துறை டி.ஜி.பி.க்கு தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் அனுப்பியிருக்கிறார்.
நிலம் விற்பதாகக் கூறி, 28 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன் ஜாமீன் கோரி குற்றம் சாட்டப்பட்டவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, பணம் கொடுக்கல் - வாங்கல் தொடர்பான உரிமையியல் விவகாரம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் 420-வது பிரிவின் கீழ் மோசடி குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்வதை தவிர்க்க அறிவுறுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டி, டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டிருந்தது.
இது சம்பந்தமாக உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கண்காணிப்பு குழுவை அமைக்க டிஜிபிக்கு உத்தரவிட்ட மதுரைக் கிளை, இதற்கு உதவியாக செயல்பட தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கும் அறிவுறுத்தியிருந்தது.

இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான உரிமையியல் பிரச்னைகளில் மோசடி குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்வதை தவிர்க்கும்படி, காவல் துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும் என டி.ஜி.பி.க்கு தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், மோசடி வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாகவும், அதனால் மோசடி குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யும் போது விழிப்புடன் இருக்கும்படி காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் டி.ஜி.பி.யை தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா கேட்டுக் கொண்டுள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications