குழந்தைங்கள பத்தி யாருக்காவது இங்கே அக்கறை இருக்கா.. ரஜினி கடும் தாக்கு
சென்னை விழாவில் குழந்தைகள் நலன் குறித்து ரஜினி உரையாற்றினார்.
சென்னை: "குழந்தைங்கள பத்தி யாருக்காவது அக்கறை இருக்கா? அவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் எந்த அக்கறையும் காட்டுவதே இல்லை" என்று ரஜினிகாந்த் கடுமையாக தாக்கி கூறியுள்ளார்.
குழந்தைகளின் அமைதிக்கான நிகழ்ச்சி ஒன்றினை லதா ரஜினிகாந்த் ஏற்பாடு செய்திருந்தார். இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:
"குழந்தைகள்தான் இந்த பூமியில் பூத்துள்ள அழகான பூக்கள். ஆனால் அழகான அந்த பூக்களை நாம் அழவைத்து விடுகிறோம்.

மத்திய, மாநில அரசுகள்
அமெரிக்கா, லண்டன், ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளின் வளர்ச்சிக்காக செலவிடும் பணம் ஆகட்டும், நேரம் ஆகட்டும், ஏன் அவர்களுக்கு செய்து தரும் புராஜக்ட் கூட ஆகட்டும், அதில் ஒரு பெர்சன்ட்கூட நம்முடைய மத்திய அரசோ, மாநில அரசோ செலவு செய்றது இல்லை.

என்ன பிரயோஜனம்?
குழந்தைங்க மீது எந்த அக்கறையும் காட்டுவதும் இல்லை. அவங்க வளர்ச்சி தானே முக்கியம்? அவங்க வளர்ச்சியில அக்கறை காட்டலேன்னா, இந்த நாடு எப்படி நல்லா இருக்கும்? அரசாங்கத்தை நம்பி பிரயோஜன இல்லை. குழந்தைங்க ரோட்டில பிச்சைதான் எடுக்கிறாங்க.

மாஃபியா கும்பல்
அவங்ககிட்ட போலீஸ்காரங்க யாராவது போய், ஏன் பிச்சை எடுக்கறீங்க? உங்களுக்கு பின்னாடி யார் இருக்காங்கன்னு கேட்டிருக்காங்களா? அப்படி கேட்டால், நிறைய விஷயங்கள் வெளியே வந்துவிடும். ஏன் என்றால், இந்த குழந்தைகளை வைத்து ஒரு பெரிய மாஃபியா கும்பலே இயங்குகிறது.

கவலை இருக்கிறதா?
அந்த கும்பலை பத்தி நாம் உட்பட அரசாங்கம் வரை யாருமே கண்டுக்கிறதும், கவலைப்படறதும் இல்லை. அந்த குழந்தைங்க அனாதையாகி, நோயாளியாகி, பிச்சை எடுத்து பிச்சை எடுத்தே வாழ்க்கை முழுசும் செத்து செத்து பிழைக்கிறார்கள்.

தண்டனை தர வேண்டும்
இது எவ்வளோ பெரிய குற்றம் தெரியுமா? கொலை செய்றதைவிட பெரிசு இது. குழந்தை கடத்தல் கும்பலை தடுக்க நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு கடுமையான தண்டனையும் தரவேண்டும்."
இவ்வாறு ரஜினி பேசினார்.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications