குழந்தைங்கள பத்தி யாருக்காவது இங்கே அக்கறை இருக்கா.. ரஜினி கடும் தாக்கு
சென்னை விழாவில் குழந்தைகள் நலன் குறித்து ரஜினி உரையாற்றினார்.
சென்னை: "குழந்தைங்கள பத்தி யாருக்காவது அக்கறை இருக்கா? அவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் எந்த அக்கறையும் காட்டுவதே இல்லை" என்று ரஜினிகாந்த் கடுமையாக தாக்கி கூறியுள்ளார்.
குழந்தைகளின் அமைதிக்கான நிகழ்ச்சி ஒன்றினை லதா ரஜினிகாந்த் ஏற்பாடு செய்திருந்தார். இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:
"குழந்தைகள்தான் இந்த பூமியில் பூத்துள்ள அழகான பூக்கள். ஆனால் அழகான அந்த பூக்களை நாம் அழவைத்து விடுகிறோம்.

மத்திய, மாநில அரசுகள்
அமெரிக்கா, லண்டன், ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளின் வளர்ச்சிக்காக செலவிடும் பணம் ஆகட்டும், நேரம் ஆகட்டும், ஏன் அவர்களுக்கு செய்து தரும் புராஜக்ட் கூட ஆகட்டும், அதில் ஒரு பெர்சன்ட்கூட நம்முடைய மத்திய அரசோ, மாநில அரசோ செலவு செய்றது இல்லை.

என்ன பிரயோஜனம்?
குழந்தைங்க மீது எந்த அக்கறையும் காட்டுவதும் இல்லை. அவங்க வளர்ச்சி தானே முக்கியம்? அவங்க வளர்ச்சியில அக்கறை காட்டலேன்னா, இந்த நாடு எப்படி நல்லா இருக்கும்? அரசாங்கத்தை நம்பி பிரயோஜன இல்லை. குழந்தைங்க ரோட்டில பிச்சைதான் எடுக்கிறாங்க.

மாஃபியா கும்பல்
அவங்ககிட்ட போலீஸ்காரங்க யாராவது போய், ஏன் பிச்சை எடுக்கறீங்க? உங்களுக்கு பின்னாடி யார் இருக்காங்கன்னு கேட்டிருக்காங்களா? அப்படி கேட்டால், நிறைய விஷயங்கள் வெளியே வந்துவிடும். ஏன் என்றால், இந்த குழந்தைகளை வைத்து ஒரு பெரிய மாஃபியா கும்பலே இயங்குகிறது.

கவலை இருக்கிறதா?
அந்த கும்பலை பத்தி நாம் உட்பட அரசாங்கம் வரை யாருமே கண்டுக்கிறதும், கவலைப்படறதும் இல்லை. அந்த குழந்தைங்க அனாதையாகி, நோயாளியாகி, பிச்சை எடுத்து பிச்சை எடுத்தே வாழ்க்கை முழுசும் செத்து செத்து பிழைக்கிறார்கள்.

தண்டனை தர வேண்டும்
இது எவ்வளோ பெரிய குற்றம் தெரியுமா? கொலை செய்றதைவிட பெரிசு இது. குழந்தை கடத்தல் கும்பலை தடுக்க நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு கடுமையான தண்டனையும் தரவேண்டும்."
இவ்வாறு ரஜினி பேசினார்.
-
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications