சரியாக பேச முடியாத மகன்.. ஏன் குழந்தைக்கு பேச்சு வரல? துளைத்தெடுத்த கணவர்! டக்னு மனைவி செய்த காரியம்
சென்னை: இந்தியாவில் குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. கணவனை மனைவி கொல்வது, அல்லது மனைவியை கணவன் கொலை செய்வது, அல்லது இருவரில் யாராவது ஒருவர் கள்ளக்காதலுக்காக தாங்கள் பெற்ற குழந்தைகளையே கொல்வது என சொல்லமுடியாத அளவுக்கு வன்முறை தலைவிரித்தாடுகின்றன.... இளம் தம்பதிகளிடம் புரிதல் இல்லாமல் போவது, தற்கொலைகளுக்கு வித்திட்டு விடுகின்றன.. அந்தவகையில், இளம்தாய் எடுத்த முடிவு, ஆந்திர மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த சாய் லட்சுமி என்பவர் ஹைதராபாத்தில் வசித்து வந்தார். இவருக்கு 27 வயதாகிறது..

ஹைதராபாத்திலேயே சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றும் அனில் குமார் என்ற 30 வயது நபருடன் 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சேதன் கார்த்திகேயா மற்றும் லாஸ்யத வள்ளி (2) என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தனர்.
இதில் மகன் சேதன் கார்த்திகேயாவுக்கு பிறந்ததிலிருந்தே பேச்சு தெளிவாக வரவில்லை என்று கூறப்படுகிறது.. இது தொடர்பாக அனில் குமார், மனைவியுடன் தகராறு செய்தபடியே இருந்தார்.. அதாவது ஜீன் பிரச்சினை காரணமாகத்தான் மகனுக்கு பேச்சு வரவில்லை, இதற்கு சாய் லட்சுமி தான் பொறுப்பு என்று அவரை நேரடியாக குற்றஞ்சாட்டி, கடுமையான டார்ச்சரையும் தந்து வந்தார்.
ஸ்பீச் தெரஃபி
கணவனின் துன்புறுத்தலுக்கு நடுவில், மகனுக்கு பேச்சு சரியாக வரவேண்டும் என்று பேச்சு பயிற்சி அதாவது ஸ்பீச் தெரபிக்காக ஏராளமான மருத்துவமனைகளுக்கு மகனை தூக்கிக் கொண்டு ஓடினார்.. ஆனாலும், மகனுக்கும் சரியான பேச்சு வரவில்லை, கணவரின் டார்ச்சரும் குறையவில்லை.
இதனால் நாளுக்கு நாள் மன உளைச்சலுக்கு ஆளான சாய் லட்சுமி, தன்னுடைய அம்மாவிடம் இதை பற்றி சொல்லி அழுதுள்ளார்.. இதையடுத்து, சாய் லட்சுமி அம்மாவும், தன்னுடைய மருமகனுக்கு பலமுறை அறிவுரையையும், ஆறுதலையும் சொல்லி வந்தார்.
எனினும் சாய் லட்சுமியிடம் பேசுவதை ஒருகட்டத்தில் நிறுத்திவிட்டார் அனில்குமார்.. இதனால் மாதக்கணக்கில் தம்பதி இருவரும் பேச்சுவார்த்தை இல்லாமலேயே இருந்து வந்துள்ளனர்..
அப்பார்ட்மெண்ட் 4வது மாடி
இதனால் சாய் லட்சுமி நாளுக்கு நாள் விரக்தி மனப்பான்மைக்கு ஆளானார். இப்படிப்பட்ட சூழலில்தான், அனில் குமார் விசாகப்பட்டினத்தில் உள்ள தன்னுடைய சகோதரர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
கணவருடன் ஓயாத பிரச்சினை இருந்து வந்ததால், அவர் இல்லாத நேரத்தில் தன்னுடைய பிள்ளைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்வதென சாய் லட்சுமி முடிவு செய்தார்.
இதற்காக குழந்தைகள் நன்றாக தூங்கி கொண்டிருந்தபோது, அவர்களின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி மூச்சு திணற வைத்து கொன்றார்.. பிறகு, தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து குதித்து தன்னுடைய உயிரையும் மாய்த்துக்கொண்டார்.
வீடியோ பேச்சு
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும், சாய் லட்சுமியின் வீட்டையும் ஆய்வு செய்தனர். அப்போது தற்கொலைக்கு முன்பாக பெற்றோருக்கு செல்போனில் ஒரு வீடியோ செய்தியை ரெக்கார்ட் செய்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
அந்த வீடியோவில், "அவர் திருந்த மாட்டார். நான் மிகவும் வேதனையில் இருக்கிறேன்.. இப்போது இந்த தவறையும் செய்து கொண்டிருக்கிறேன். நானே இல்லாதபோது, என் குழந்தைகள் உயிரோடு இருப்பது அவசியமில்லை.. என்னை மன்னித்து விடுங்கள்" என்று கண்ணீருடன் வீடியோவில் பேசியிருந்தார் சாய் லட்சுமி..
இதுகுறித்து சாய் லட்சுமியின் அப்பா மாறைய்ய பாபு கொடுத்த புகார் மீது, அவரது கணவர் மற்றும் மாமியார், மாமனார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்,
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications