மன்சூர் அலிகானை போல் ஐஸ்வர்யா ராயை ஆபாசமாக பேசிய ராதாரவி.. ஆக்ஷன் எடுக்காதது ஏன்.. சின்மயி கேள்வி
சென்னை: எனக்கு மட்டும் ஹிந்தி தெரிந்திருந்தால் நான் பாலிவுட்டில் நடித்திருப்பேன் என்றும் ஐஸ்வர்யா ராயை பலாத்காரம் செய்திருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கும் என்றும் ராதாரவி சொன்னதற்கு ஏன் யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை என பாடகியும் சமூக ஆர்வலருமான சின்மயி வீடியோ ஆதாரத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
லியோ படத்தில் நடிகர் விஜய், அர்ஜுன், சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பொதுவாக மன்சூர் அலிகான் ஆரம்ப கட்டத்திலிருந்தே வில்லன் ரோல்களில் நடித்து வருகிறார்.

அவருக்கு பெரும்பாலும் பெண்களை பலாத்காரம் செய்வது, கொலை குற்றம் புரிவது, கஞ்சா உள்ளிட்டவற்றை கடத்துதல், சட்டவிரோத விஷயங்களை செய்து அவரை ஹீரோ கண்டுபிடிப்பது போன்ற ரோல்கள் அமையும்.
இந்த நிலையில் லியோ படத்தில் நடித்த மன்சூர் அலிகான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நடிகை த்ரிஷா இந்த படத்தில் நடித்தார் என எனக்கு தெரிந்தவுடன் அவரை பலாத்காரம் செய்யும் காட்சிகள் இருக்கும் என நினைத்தேன். ஆனால் இல்லாமல் போய்விட்டது. இருந்திருந்தால் குஷ்பு உள்ளிட்டோருடன் அந்த காட்சிகளில் நடித்தது போல் நடித்திருப்பேன் என தெரிவித்தார்.
இந்த பேச்சுக்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். பெண்கள் என்ன பலாத்காரம் செய்யும் பொருளா என்ற கேள்வி எழுந்துள்ளது. காமெடி என்ற பெயரில் இப்படி வன்மத்தை கக்குவதா என்றும் விமர்சனங்கள் வந்தன. நடிகை த்ரிஷாவும் இது போல் மனிதத்தன்மை இல்லாத ஒருவருடன் இனி நான் எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என கூறி கண்டித்திருந்தார்.
நடிகை த்ரிஷாவுக்கு நடிகைகள் குஷ்பு, மாளவிகா மோகன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி, இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்பேரில் அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் த்ரிஷா விவகாரத்தில் இத்தனை பேர் கண்டிக்கும் நிலையில் ராதாரவி இதை விட மோசமாக ஒரு நிகழ்ச்சியில் பேசியதாக பழைய வீடியோவை எடுத்து போட்டிருக்கிறார் பாடகி சின்மயி.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ராதாரவி தமிழ் சினிமா யூனியன்களில் முக்கிய பதவிகளில் இருந்து வருகிறார். இவரும் மன்சூர் அலிகான் சொன்னது போல்தான் சொல்லியுள்ளார். ஆனால் அவர் ஏதோ ஒரு பெரிய ஜோக் அடித்துவிட்டது போல் எல்லாரும் சிரிக்கிறார்கள். இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏன் யாரும் நினைக்கவில்லை என்பது குறித்து அறிய விரும்புகிறேன் என சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையடுத்து ராதாரவி பேசிய வீடியோவும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தமிழ் தமிழ் தமிழ்னு சொல்றாங்க, நான் ஹிந்தி கத்துகிட்டிருந்தால் ஐஸ்வர்யா ராயை கெடுத்திருப்பேன்ல. நமக்கு அந்த வேஷம்தானே கொடுப்பாங்க, கடவுள் வேஷமா கொடுப்பாங்க என பேசியுள்ளார். இவர் திமுகவில் இருந்த போது நயன்தாராவையும் கடுமையான வார்த்தைகளால் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம்












Click it and Unblock the Notifications