பயணிகளே கவனிங்க.. கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறையையொட்டி சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
சென்னை: கிறிஸ்துமஸ், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து டிசம்பர் 23, 24 அம் தேதிகளில் 780 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து 23, 24 ஆம் தேதிகளில் 91 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதவரத்தில் இருந்து 23, 24 ஆம் தேதிகளில் 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு எளிதாகச் செல்லும் வகையில், அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் காரணமாக பயணிகள் கூட்டம் அதிகரிக்கும். அரையாண்டு விடுமுறையும் வருவதால், பெரும்பாலானோர் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். அதற்கேற்ப இந்த ஆண்டும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

குறிப்பாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் மக்கள் அதிகம் இருப்பார்கள் என்பதால், அந்த வழித்தடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 23 ஆம் தேதி சென்னையிலிருந்து 225 சிறப்புப் பேருந்துகளையும் டிசம்பர் 24 ஆம் தேதி 525 சிறப்பு பேருந்துகளையும் இயக்க தமிழக போக்குவரத்துத் துறை திட்டமிட்டு உள்ளது.
வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுக்கு மேலாக இந்த கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம், கே.கே.நகர், திருவான்மியூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து டிசம்பர் 23, 24 ஆம் தேதிகளில் திருச்சி, கும்பகோணம், சேலம், நெல்லை, மதுரைக்கு 780 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து 23, 24 ஆம் தேதிகளில் 91 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதவரத்தில் இருந்து 23, 24 ஆம் தேதிகளில் 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அரசு பேருந்துகளில் முன்பதிவு வசதி அதிக அளவில் செய்யப்பட்டுள்ளதால், பலர் ஆன்லைன் மூலமாகவே டிக்கெட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக குடும்பத்துடன் சொந்த ஊர் செல்லும் பயணிகள், அரசு பேருந்துகளை பாதுகாப்பான மற்றும் குறைந்த செலவிலான போக்குவரத்து முறையாக தேர்வு செய்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து வெளி ஊர்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. சாதாரண நாட்களில் இருக்கும் கட்டணத்தை விட, பண்டிகை நாட்களில் மும்மடங்கு வரை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications