கொரோனாவுக்கு இடையே.. தியேட்டர்களில் 100% ரசிகர்களுக்கு அனுமதி.. விஜய் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு
சென்னை: திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. நடிகர்கள் விஜய், சிம்பு உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
Recommended Video

கொரோனா பரவலை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. இடையே கடைகள் திறப்பு, போக்குவரத்து தொடக்கம் என்றிருந்தாலும் தியேட்டர்களுக்கு மட்டும் அரசு அனுமதி அளிக்கவில்லை.
இதையடுத்து திரையரங்க உரிமையாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். கடந்த நவம்பர் மாதம் 10-ஆம் தேதி முதல் தியேட்டர்கள், மால்களில் உள்ள தியேட்டர்கள் என 50 சதவீதம் இருக்கைகளுடன் இயங்கலாம் என அரசு அனுமதி அளித்தது.

தியேட்டர் உரிமையாளர்கள்
மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இந்த 50 சதவீத இருக்கைகள் மூலம் கிடைக்கும் வருவாயில் ஊதியம் கொடுக்கவும் பராமரிக்கவும் போதவில்லை என தியேட்டர் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

இருக்கை
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். அப்போது சினிமா துறை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கேட்டுக் கொண்டார்.

ஈஸ்வரன்
பொங்கலுக்கு விஜயின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய படங்கள் வெளியாகின்றன. இன்றைய தினம் சிம்பு ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் 100 சதவீதம் இருக்கைகளை பயன்படுத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

அரசாணை
இந்த நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முறையான வழிகாட்டு நெறிமுறைகளை தியேட்டர் நிர்வாகம் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications