குடியுரிமை சட்டம் பற்றி கேள்வி கேட்ட செய்தியாளர்.. சமாளித்த ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா?
குடியுரிமை சட்டம் குறித்து நான் சினிமா மேடையில் பேச மாட்டேன், அதை பற்றி வேறு மேடையில் பேசுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: குடியுரிமை சட்டம் குறித்து நான் சினிமா மேடையில் பேச மாட்டேன், அதை பற்றி வேறு மேடையில் பேசுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க கலவரமும் போராட்டமும் வெடித்து இருக்கிறது. டெல்லியில் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்
இந்த நிலையில் நேற்று தர்பார் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்திடம் குடியுரிமை சட்டம் குறித்தும், அதற்கு எதிரான போராட்டம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

சினிமா மட்டும்
இதற்கு பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த் , இது சினிமா விழா, இங்கு டிரைலர் வெளியிட வந்து இருக்கிறோம். அதை பற்றி பேசலாம். சினிமா அரசியல் இரண்டையும் ஒன்றாக சேர்க்க வேண்டாம் என்று குறிப்பிட்டார்.

மீண்டும் கேள்வி
அதற்கு தொடர்ந்து கேள்வி எழுப்பிய அந்த செய்தியாளர், உங்களுடைய குரல் முக்கியமானது, அழுத்தமானது. நீங்கள் பேசுவது மிக முக்கியமானது. அதனால்தான் கேட்கிறேன். இந்த சட்டம் குறித்தும் போராட்டம் குறித்தும் உங்களுடைய கருத்து என்ன? என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்.
|
என்ன கருத்து
இதற்கு மீண்டும் பதில் சொன்ன ரஜினி, எனக்கு இது தொடர்பாக கருத்து உள்ளது. ஆனால் அதை நான் இப்போது சொல்ல மாட்டேன். அதற்கு என்று ஒரு மேடை இருக்கிறது. அந்த மேடையில் என்னுடைய கருத்தை செல்வேன் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் படங்கள்
பொதுவாக ரஜினிகாந்த் தன்னுடைய படங்களுக்கு முன் அரசியல் குறித்து பேசுவது வழக்கம். படம் வெளியாகும் போது அரசியல் குறித்து பேசியே வைரலாவார். ஆனால் இந்த முறை ரஜினி மிக முக்கியமான விஷயம் குறித்து கருத்து சொல்லாமல் விட்டுள்ளார். வேண்டுமென்றே இந்த பிரச்சனை குறித்து பேசாமல் தவிர்த்துள்ளார்.












Click it and Unblock the Notifications