சாதிக் பாட்சாவை நடுரோட்டில் பார்த்த எடப்பாடியார்.. ரெண்டே நாள்தான்.. கோவையையே அசர வைத்த முதல்வர்!
மாற்று திறனாளி இளைஞருக்கு முதல்வர் பணி நியமன ஆணை வழங்கி உள்ளார்
சென்னை: சாதிக் பாஷாவின் வாழ்க்கை ரெண்டே நாளில் அடியோடு உயர மாறிவிட்டது.. இதற்கு காரணம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்.
நம் முதல்வரை பொறுத்தவரை ரொம்பவும் எளிமையானவர்.. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சென்று எளிதாக அணுகக்கூடியவர்.
அதேபோல முதல்வருக்கு எந்த பந்தாவும் காட்ட தெரியாது... சாலையில் எங்காவது வெளியூருக்கு சென்று கொண்டிருந்தால்கூட, காரை நிறுத்திவிட்டு, பொதுமக்களை சந்தித்து பேசுவார்.. அக்கறையாக நலன் விசாரிப்பார்.. எல்லாரையும் மாஸ்க் போடுங்க என்று அட்வைஸ் செய்துவிட்டு கிளம்பி செல்வார்.

முதல்வர்
அதுமட்டுமல்ல, இப்படி வெளியூருக்கு செல்லும்போதும், திரும்பி வரும்போதும், முதல்வரின் பயணம் ஒவ்வொரு முறையும் பேசப்பட்டுவிடும்.. அதற்கு காரணம், சாலையோரம் தன்னை சந்திக்க கையில் மனுவுடன் காத்திருக்கும் எத்தனையோ பேருக்கு ஆன் தி ஸ்பாட் உதவி உள்ளார்.. அது மாதிரியே இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இளைஞர்
கடந்த 18ஆம் தேதி கோவையிலிருந்து சேலம் செல்லும் வழியில் குமாரபாளையத்தில் ஒரு இளைஞர் கையில் மனுவுடன் நின்று கொண்டிருந்தார்.. அவர் ஒரு மாற்றுத்திறனாளி.. பெயர் சாதிக் பாஷா.. அவரை பார்த்ததுமே முதல்வர் தன்னுடைய காரை நிறுத்தவும், சாதிக் பாட்சா அவர்களின் அருகில் சென்றார்.. அவர் கையில் இருந்த கோரிக்கை மனுவையும் முதல்வர் பெற்று கொண்டு கிளம்பி விட்டார்.

கோரிக்கை மனு
சாதிக் பாட்சா, 12-ம் வகுப்பு வரை படித்தவர்.. தமிழ், ஆங்கிலத்தில், டைப்ரைட்டிங், எம்எஸ்... ஆபீஸ் டேலி இதெல்லாம் படித்துள்ளாராம்.. தான் ஒரு மாற்றுத்திறனாளியாக இருப்பதால் அரசு வேலை வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்... இந்த மனு வாங்கிய ரெண்டே நாளில் சாதிக் பாட்சாவுக்கு வேலை கிடைத்துவிட்டது. குமாரபாளையம் நகராட்சி பொது சுகாதார பிரிவில் கணினி பணியாளர் வேலை அவருக்கு கிடைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பூரிப்பு
அந்த அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரை அமைச்சர் தங்கமணி சாதிக் பாட்சாவிடம் வழங்கினார்.. மனுவை வாங்கி கொண்டு போய், ரெண்டே நாளில் முதல்வர் அரசு வேலையை அளித்ததை நினைத்து சாதிக் பாட்சா ஆனந்த கண்ணீர் வடித்தார்.. உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தன் சார்பிலும், மாற்றுத்திறனாளிகள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பூரித்து போய் சொல்கிறார்!
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications