தமிழக முதல்வருக்கே பிறப்புச் சான்றிதழ் இல்லையாம்.. இதை எடப்பாடிதான் சொன்னார்.. சீமான் பகீர் தகவல்
திருச்சி: எனக்குக் கூடத்தான் பிறப்புச் சான்றிதழ் இல்லை. நிரூபிப்பது கடினம்தான் தம்பி என தன்னிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமை திருத்த சட்டம் இரு அவைகளிலும் நிறைவேறி சட்டமாகியது. இதற்கு டெல்லி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மாஸ் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அது போல் தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட இரு சட்டங்களின்படி பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

உழவர் சந்தை
இதையெல்லாம் கண்டித்து திருச்சியில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. 21வது நாளான நேற்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் என்பிஆருக்கு எதிராக மற்ற மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியது போல் தமிழகத்திலும் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

ஒட்டுமொத்த மக்கள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என என்னிடமே கூறியுள்ளார். நம் நாட்டின் குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் கூட பிறப்புச் சான்றிதழில் இருக்காது. குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லீம்களுக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கே எதிரானது. இந்த சட்டத்தில் இருக்கும் நடைமுறையால் ஒட்டுமொத்த மக்களே அரசு முகாம்களுக்கு செல்ல வேண்டிய நிலைதான் வரும்.

டிரம்ப்
இந்தியாவில் இனி அகதிகளாக வருபவர்களுக்கு குடியுரிமை தர மாட்டோம் என கூறலாமே தவிர, ஏற்கெனவே வந்தவர்களுக்கு குடியுரிமை தர மாட்டோம் என்பது குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு தரமாட்டோம் என கூறுவது பாசிசம் ஆகும். பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் ஒரே சிந்தனை கொண்டவர்கள். அதனால்தான் இந்தியா வந்த டிரம்ப் சிஏஏ குறித்து எதையும் பேசவில்லை என தெரிவித்தார்.

நான் இறந்துவிட வேண்டுமா?
அது போல் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் தனக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என கூறியுள்ளார். தன்னிடமே இல்லாத போது ஏழை எளிய மக்களிடம் எப்படி இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் என்னிடமே பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலையில் என் தந்தையிடம் எப்படி அந்த சான்றிதழ் இருக்கும்? அதற்கு நான் இறந்துவிட வேண்டுமா என பகீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மிரட்டும் மின்வெட்டு.. நள்ளிரவு நடுத்தெருவில் போராடிய சென்னை மக்கள்.. நழுவிய அதிகாரிகள் -
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications