புது அமைச்சர்கள் நியமனமா.. ஆளுநரை முதல்வர் பழனிச்சாமி சந்தித்தது ஏன்?.. பரபரக்கும் அரசியல் களம்
தமிழக ஆளுநரை இன்று நேரில் சந்தித்து பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Recommended Video
சென்னை: நாளுக்கு நாள் சூடாகி வரும் அரசியல் பரபரப்பு நிகழ்வுகளுக்கு இடையே தமிழக ஆளுநரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார்.. அரை மணி நேரமே நடைபெற்ற சந்திப்பு இது என்றாலும் அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கி உள்ளது.
ரஜினிக்கு விருது சர்ச்சை, திருவள்ளுவர் விவகாரம் என்று தமிழகத்தில் இன்றைய கள நிலவரம் பரபரப்பை தந்து வருகிறது. இந்த சூழலில் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார் என்ற தகவலும் வெளியானது.
அதன்படி, கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலாலை இன்று மாலை சந்தித்து முதல்வர் பழனிசாமி பேசினார். அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழக சட்டம் ஒழுங்கு, மற்றும் தற்போதைய அரசியல் நிலை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

பதட்டம்
எனினும், அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது. சில அமைச்சர்கள் மத்தியில் தாங்கள் நீக்கப்படலாமா என்ற பதட்டம் நிலவி வருவதாகவும் பேச்சு அடிபடுகிறது. ஆனால், வருகிற 6-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்க போகும் நிர்வாகிகள் கூட்டத்தில்தான் இதெல்லாம் முடிவாகும் என்றும் சொல்லப்படுகிறது.

முன்னாள்கள்
ஆளுநர் - முதல்வர் இந்த சந்திப்புக்கு என்ன காரணமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் கூடவே எழ ஆரம்பித்தது. கட்சியில் சீட் கிடைக்காமலும், அமைச்சர் பதவி கிடைக்காமலும் சில முன்னாள்கள் பொருமிக் கொண்டுள்ளனர். மேலும், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களையும், தவறு செய்யும் அமைச்சர்களையும் முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார் என்ற வருத்தத்திலும் உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல்
இப்படி அதிருப்தியானவர்களை சமாளிக்க எடப்பாடியார் முடிவு செய்துள்ளாராம். அப்போதுதான், நடக்க போகிற உள்ளாட்சித் தேர்தலில் விறுவிறுவென களமிறங்க முடியும் என்று நினைத்து, இதற்காக அமைச்சரவையில் மாற்றம் செய்யலாமா என்றும் யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

அதிரடிகள்
அதாவது கடுமையான குற்றச்சாட்டுக்கள் கூறப்படும் அமைச்சர்களை மாற்றுவது அல்லது பொறுப்புகளை மாற்றி தருவது என சில அதிரடிகளையும் முதல்வர் எடுக்க உள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாகவே ஆளுநரை முதல்வர் சந்தித்தாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஆளுநர் - முதல்வர் சந்திப்பு தொடர்பாக இதுவரை ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிடவில்லை. இரவில் அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications