அம்மா.. இங்க வாங்க.. உங்களுக்கு என்ன வேணும்.. பாட்டியிடம் வாஞ்சை காட்டிய பழனிச்சாமி!
மூதாட்டிக்கு முதியோர் உதவிதொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார் முதலமைச்சர்
சென்னை: "அம்மா.. இங்கே வாங்க.. உங்களுக்கு என்ன வேணும்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைத்து பேசியதுடன், உதவியும் செய்துள்ளது நெகிழ்ச்சியை தருவதாக மூதாட்டி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போன 6-ம் தேதி தென்காசியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி ஏர்போர்ட்டில் இருந்து கார் மூலம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பாளையங்கோட்டையில் பொதுமக்கள் திரண்டு வந்து முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தார்கள். அந்த வரவேற்பு நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் ஒரு பாட்டி சிக்கி கொண்டார். அவர் அந்த கூட்டத்திலும் தட்டு தடுமாறி முதல்வரை நோக்கி வர முயற்சி செய்தார்.
பாளையங்கோட்டை சிறுதுணைநயினார் தெருவை சேர்ந்தவராம் அந்த பாட்டி. பெயர் திருப்பதி.. கஷ்டப்பட்டு வருவதை பார்த்த முதல்வர், பாட்டியை வரவேற்பு மேடைக்கு அழைத்து வரச்சொன்னார். "உங்களுக்கு என்னம்மா வேண்டும்" என்று பரிவோடு கேட்டார். அதற்கு பாட்டி, வாழ்வாதாரத்துக்கு ஏதாவது உதவி வேணும் என்று சொல்லி, கூடவே ஒரு மனுவையும் தந்தார்.
இதனை வாங்கி கொண்ட எடப்பாடியார், "இன்னும் நாலு நாள் கழிச்சு இதே பகுதிக்கு வாங்கம்மா.. என் கையாலேயே உங்களுக்கு உதவி தொகை பெறுவதற்கான ஆணையை தருவேன்" என்று சொன்னார். அத்துடன் பாட்டிக்கு ஒரு சால்வையையும் அணிவித்து அனுப்பி வைத்தார்.
அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து, முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை முதலமைச்சர் அந்த மூதாட்டியிடம் வழங்கினார். கேட்ட நாலு நாளில் உதவி கிடைத்ததை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்த பாட்டி, முதலமைச்சருக்கு மகிழ்ச்சி பொங்க நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
-
ஜெயித்தது தூத்துக்குடியில், நன்றி சொல்வது திருச்செந்தூரிலா.. ஸ்ரீநாத்தை கிண்டல் செய்யும் கட்சிகள் -
தூத்துக்குடியில் பயங்கரம்.. நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. போலீஸ் செய்த அதிரடி சம்பவம் -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
"நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர்..!" கண்ணீர் மல்க பேசிய நடிகை தீபாவின் அப்பா... நேரில் ஆறுதல் கூறிய கீதா ஜீவன் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications