“தம்பி உதயநிதி அழைக்கிறார்”.. திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்! இளைஞரணி மாநாடுக்கு ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

தமிழ்­நாட்­டு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2007 ஆம் ஆண்டு திமுக இளை­ஞ­ர­ணிச் செய­லா­ள­ராக இருந்­த­போது இளை­ஞ­ர­ணி­யின் முதல் மாநில மாநாடு திரு­நெல்­வே­லி­யில் நடை­பெற்­றது. இந்த நிலையில் டிசம்பர் 17 ஆம் தேதி அன்று இளை­ஞ­ர­ணி­யின் 2 வது மாநில மாநாடு சேலத்­தில் நடை­பெ­ற உள்ளது. ஒரு­நாள் மாநா­டாக இது ஏற்­பாடு செய்யப்பட்டு உள்ளது. திமுக இளை­ஞ­ர­ணிச் செய­லா­ளர் அமைச்சர் உதயநிதி தலை­மை­யில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

CM M.K.Stalin has written a letter to the party workers regarding youth wing conference

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளான இன்று தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் திமுக கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது, "தேர்தல் களத்திற்கான பயிற்சிக் களமாக அமைய இருக்கும் இளைஞரணியின் 2 வது மாநில மாநாட்டின் வெற்றி, அதனைப் பறைசாற்ற வேண்டும். நெல்லையில் நடந்த இளைஞரணியின் முதலாவது மாநில மாநாட்டின்போது, புதிய ஆத்திசூடியை வழங்கினார் முத்தமிழறிஞர் கலைஞர்.

அதில், கழகம் வில்லாம் நின் அணியே கணையாம் என்று எழுதியிருந்தார். களத்தில் பாய்வதற்குத் தயாராக இருக்கும் கணைகளாக இளைஞரணியினர் செயலாற்றி வருகிறார்கள். அவர்களுக்குத் துணை நிற்கவும், இந்தியா திரும்பிப் பார்க்கும் வகையில் மகத்தான வெற்றி மாநாடாக அமையவும் மாநாட்டுத் தலைவர் தம்பி உதயநிதி அழைக்கிறார்." என்று ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த மாநாட்டு ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவிக்கையில், "மாநாட்­டின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ராக இருந்து நான் பல்­வேறு பணி­களை ஆற்றி வரு­கி­றேன். காலை 9 மணி அளவில் கட்சியின் இரு­வண்­ணக் கொடியை மக­ளி­ர­ணிச் செய­லா­ளர் கனி­மொழி அவர்­கள் ஏற்றி வைக்­கி­றார்­கள். மாண­வ­ர­ணிச் செய­லா­ளர் சி.வி.எம்.பி.எழி­ல­ர­சன் மாநாட்­டைத் திறந்து வைக்க உள்­ளார்­கள். முக்கியப் பேச்­சா­ளர்­கள் பல்­வேறு தலைப்­பு­க­ளில் உரை­யாற்­று­கி­றார்­கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் மாலை 6 மணிக்கு சிறப்­புரை ஆற்­று­கி­றார்­கள்.

இந்த இளை­ஞ­ரணி மாநாடு திமுகவின் வர­லாற்­றில் மட்­டுமின்றி தமிழ்நாடு வர­லாற்­றி­லும், இந்­திய வர­லாற்­றி­லும் முக்­கி­ய­மான மாநா­டாக அமை­யப் போகி­றது. அடுத்து வர உள்ள நாடா­ளு­மன்­றத் தேர்­தல் வெற்றிக்கு சேலம் மாநாடு அடித்­த­ளம் அமைக்­கும் மாநா­டாக அமை­யும். கிட்­டத்­தட்ட 5 லட்­சம் திமுக தொண்டர்கள், இளை­ஞ­ர­ணி நிர்வாகிகள் வர உள்ளனர். அதற்­கான ஏற்­பா­டு­களை நாங்கள் செய்­து இ­ருக்­கி­றோம். இது அவர்­க­ளுக்கு எழுச்­சி­யும் உணர்ச்­சி­யும் ஊட்­டும் மாநா­டாக அமையப் போகிறது." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+