நாடே சிரிக்குது தெரியுமா? என்ன உரிமை இருக்கு உங்களுக்கு? இபிஎஸ்ஸிடம் முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி
சென்னை: எதிர்கட்சியான அதிமுகவை பார்த்து நாடே சிரிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு சட்டபையில் பேசி இருக்கிறார்.
Recommended Video
தமிழ்நாட்டில் சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீது நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் இன்று உரையாற்றினார். இந்த உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு சங்கங்களின் திருத்த சட்ட முன்வடிவை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளோம். தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தை தடுக்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. தமிழ்நாடு காவல்துறை அரசின் ஏவல் துறையாக மாறிவிட்டது என்று குற்றஞ்சாட்டினார்.

முதல்வர் ஸ்டாலின் சட்டசபை
இதையடுத்து எதிர்கட்சித் தலைவர் பேட்டிக்கு முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பதில் அளித்தார். அதில், எதிர்கட்சித் தலைவர் இன்று அவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் வெளியே செய்தியாளர்களை சந்தித்தார். வெளியே பேசியவர் மழை வெள்ளத்தால் சென்னை மூழ்கிவிட்டது என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று பேசி இருக்கிறார். அவருக்கு மழை வெள்ளம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு
அதிமுகவிற்கு இதை பற்றி பேச என்ன தார்மீக உரிமை இருக்கிறது. 2015ல் டிசம்பரில் செம்பரம்பாக்கத்தை இரவில் திறந்தது நீங்கள்தான். முன்னறிவிப்பின்றி செம்பரம்பாக்கத்தை திறந்தது நீங்கள். பல நூறு பேர் பலியானார்கள். சொந்த நாட்டிலேயே தமிழ்நாடு மக்கள் அகதி ஆனார்கள். இது இயற்கை பேரிடர் அல்ல செயற்கை பேரிடர் என்று பத்திரிகைகள் தலையங்கம் கூட எழுதின.

அதிமுக ஸ்டாலின்
நீங்கள் சரியாக செயல்பட்டு இருந்தால் அப்போது வெள்ளம் ஏற்பட்டு இருக்குமா. அதன்பின் மழை நீர் செல்ல ஏதாவது வழி ஏற்படுத்தினீர்களா? எதோ புண்ணுக்கு மருந்து தடவுவது போல கடைசியில் நிவாரணம் வழங்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி என்று கூறிவிட்டு எப்படி எல்லாம் ஸ்மார்ட்டாக இவர்கள் கொள்ளை அடித்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். நாடே இவர்களை பார்த்து கைகொட்டி சிரிக்கிறது.

சென்னை மழை
மழை வெள்ளம்தான் இப்படி என்றால் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறதா? அதை பற்றி பேசவாது அவருக்கு தகுதி இருக்கிறதா? கொடநாடு கொலை வழக்கு நினைவு இருக்கிறதா.. பொள்ளாச்சி பாலியல் குற்றம் தொடங்கி குட்கா வரை பல்வேறு குற்றங்களை செய்தவர்கள்தான் அவர்கள். இதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

அதிமுக திமுக
எல்லோருக்கும் இது தெரியும். நீங்கள் குற்றம் சொல்லும் முன் உங்கள் கையில் கறை இருக்கிறதா என்று பாருங்கள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடக்கிறது என்று கூறுகிறார்கள். எங்காவது ஒரு குற்றவாளி தப்பித்து இருக்கிறார்களா? யாராவது இருந்தால் சொல்லுங்கள்.. இப்போதே புடிக்கிறோம். யார் தலைமறைவாக இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள், என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications