மகளிர் உரிமைத் தொகை இன்னும் வாங்கலியா? முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அப்டேட்டை பாருங்க
சென்னை: கலைஞர் உரிமைத் தொகை பெறாத மகளிர், ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் தெரிவித்துள்ளார். தகுதியுள்ள அனைவருக்கும் மாதம் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் ஏற்கெனவே விண்ணப்பித்து விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் நிச்சயம் அவர்களுக்கும் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும்.
தமிழகத்தில் 9 ஆயிரம் இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான முகாம் 4ஆம் கட்டமாக நடைபெறுகிறது. எனவே தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பித்தால் தகுதியுடைவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் வழங்கப்படும்.
வரும் ஜூன் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் இதுவரை 1.14 கோடி பெண்கள் உரிமைத் தொகையை பெற்று வருகிறார்கள். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பாஜக கூட இந்த கலைஞர் உரிமைத் தொகை வெற்றியை பார்த்துவிட்டு மற்ற மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதியாக அளித்து அதில் வெற்றியும் பெற்றது.
விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை, உயர்த்துவதற்காக கொண்டு வரப்பட்டது இந்த திட்டம். இதற்காக சில விதிவிலக்குகளையும் தமிழக அரசு வைத்துள்ளது. ஒரு ரேஷன் கார்டுக்கு ஒருவருக்கு மட்டுமே கலைஞர் உரிமைத் தொகை கிடைக்கும். 2.5 லட்சத்துக்கு மேலான ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்கள், தொழில் வரி செலுத்தும் குடும்பத்தினருக்கு இந்த திட்டம் கிடைக்காது.
வார்டு உறுப்பினரை தவிர பிற பதவிகளில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர், எம்பி, எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளில் இருப்போரும், அவருடைய குடும்பத்தினரும் இந்த கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறவே முடியாது.
மத்திய, மாநில அரசு பதவிகளில் இருக்கும் குடும்பத்தினர், ஓய்வு பெற்றவர்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது. மத்திய, மாநில அரசு பதவிகளில் இருந்து ஆண்டுக்கு ரூ2.5 லட்சத்திற்கும் குறைவாகவே ஓய்வூதியம் பெற்றாலும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர முடியாது.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் குடும்பத்தினரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற முடியாது. முதல் கட்டமாக 1,06,50,000 பேருக்கும் இரண்டாம் கட்டமாக 70 ஆயிரம் பேருக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications