Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளிர் உரிமைத் தொகை இன்னும் வாங்கலியா? முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அப்டேட்டை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் உரிமைத் தொகை பெறாத மகளிர், ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் தெரிவித்துள்ளார். தகுதியுள்ள அனைவருக்கும் மாதம் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

stalin

சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் ஏற்கெனவே விண்ணப்பித்து விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் நிச்சயம் அவர்களுக்கும் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும்.

தமிழகத்தில் 9 ஆயிரம் இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான முகாம் 4ஆம் கட்டமாக நடைபெறுகிறது. எனவே தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பித்தால் தகுதியுடைவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் வழங்கப்படும்.

வரும் ஜூன் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் இதுவரை 1.14 கோடி பெண்கள் உரிமைத் தொகையை பெற்று வருகிறார்கள். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பாஜக கூட இந்த கலைஞர் உரிமைத் தொகை வெற்றியை பார்த்துவிட்டு மற்ற மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதியாக அளித்து அதில் வெற்றியும் பெற்றது.

விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை, உயர்த்துவதற்காக கொண்டு வரப்பட்டது இந்த திட்டம். இதற்காக சில விதிவிலக்குகளையும் தமிழக அரசு வைத்துள்ளது. ஒரு ரேஷன் கார்டுக்கு ஒருவருக்கு மட்டுமே கலைஞர் உரிமைத் தொகை கிடைக்கும். 2.5 லட்சத்துக்கு மேலான ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்கள், தொழில் வரி செலுத்தும் குடும்பத்தினருக்கு இந்த திட்டம் கிடைக்காது.

வார்டு உறுப்பினரை தவிர பிற பதவிகளில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர், எம்பி, எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளில் இருப்போரும், அவருடைய குடும்பத்தினரும் இந்த கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறவே முடியாது.

மத்திய, மாநில அரசு பதவிகளில் இருக்கும் குடும்பத்தினர், ஓய்வு பெற்றவர்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது. மத்திய, மாநில அரசு பதவிகளில் இருந்து ஆண்டுக்கு ரூ2.5 லட்சத்திற்கும் குறைவாகவே ஓய்வூதியம் பெற்றாலும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர முடியாது.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் குடும்பத்தினரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற முடியாது. முதல் கட்டமாக 1,06,50,000 பேருக்கும் இரண்டாம் கட்டமாக 70 ஆயிரம் பேருக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+