ஆளுநர் தேநீர் விருந்து: புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின் & திமுக கூட்டணி.. பங்கேற்ற முக்கிய தலைகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு தலைமைச் செயலர் முருகானந்தம், சென்னை காவல் ஆணையர் அருண் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ரவியின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளன.

Independence day RN Ravi mk stalin

ஆளுநர் தேநீர் விருந்தில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதிமுக சார்பில் எம்.பி இன்பதுரை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் சிவக்குமார், வெங்கடேஷ், சதாசிவம் ஆகியோர் ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளனர்.

ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் தமிழக ஆளுநர் மாளிகையான சென்னை கிண்டி ராஜ் பவனில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இந்த தேநீர் விருந்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உட்பட தமிழக அரசியல் கட்சிகள் பங்கேற்கும். இந்தநிலையில் இன்று சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் தேநீர் விருந்துக்கு தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர்.ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார்.

திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர். கடந்த ஆண்டு திமுக கட்சி சார்பில் ஆளுநர் விருந்தை புறக்கணித்தபோதும், தமிழக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர் என்பதால் இந்த ஆண்டும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

Independence day RN Ravi mk stalin

ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெறும் தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து செயல்படுவதை எதிர்த்து, சுதந்திர தினத்தை ஒட்டி அவர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து தொடங்கியுள்ள சூழலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. முன்னதாக அறிவித்தபடி, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளனர். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்துள்ளது.

பாஜக, அதிமுக, தேமுதிக, தமாகா, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளன. ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்க பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

அதிமுக சார்பில் எம்.பி இன்பதுரை வருகை தந்துள்ளார். அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் சிவக்குமார், வெங்கடேஷ், சதாசிவம் ஆகியோர் ஆளுநர் மாளிகை தேநீர் விருந்துக்கு வருகை தந்துள்ளனர். தேமுதிக சார்பில், விஜய பிரபாகரன், பார்த்தசாரதி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+