Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னது தமிழர்கள் குண்டு வைத்தார்களா? பாஜகவுக்கு இதே வேலை.. தேர்தல் ஆணையத்தை டேக் செய்த ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம் என்று பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜேவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் அண்மையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம் என்று மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசி இருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

CM Stalin condemns bjp union minister Shoba karandlaje for his comment on rameshwaram cafe blast

பெங்களூர் ப்ரூக்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. இதில் 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்து, பெங்களூர் மாநகர குற்றப்பிரிவு, தேசிய புலனாய்வு முகமை ஆகிய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

பாஜக அமைச்சரின் சர்ச்சை கருத்து: இந்த நிலையில், பாஜகவை சேர்ந்த மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, உணவு பதப்படுத்தும் தொழில் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வந்து எங்கள் (கர்நாடகா) ஹோட்டலில் வெடிகுண்டுகளை வைக்கிறார்கள் என்று பேசியுள்ளார்.

பாஜகவின் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றின்போது பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வந்து எங்கள் ஓட்டலில் வெடிகுண்டுகளை வைக்கிறார்கள். எங்கள் மாநிலம் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அவர்கள் மீது கர்நாடகா மாநில காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

தமிழர்கள் குண்டு வைக்கிறார்கள்: இன்னும் சிலர் வேறு இடங்களில் இருந்து வந்து "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்று கோஷம் போடுகிறார்கள். அவர்களை தடுப்பது இல்லை. மேலும் கேரளாவில் இருந்து வருபவர்கள் இங்கு மாணவர்கள் மீது ஆசிட் வீசுகிறார்கள், அப்படி செய்யபவர்கள் மீது கர்நாடகா மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் பாஜகவின் ஷோபா கரந்தலாஜே முன்வைத்துள்ள இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஷோபா கரந்தலாஜேவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் மக்களை தூண்டி விட்டு வெறுப்பை பரவி, பிரிவினைக்கு வித்திடுவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

கொதித்து எழுந்த ஸ்டாலின்: இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெங்களூர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தமிழர்களை தொடர்பு படுத்தி பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தேர்தல் ஆணையம் இந்த வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "பொறுப்பற்ற வகையில் கருத்து தெரிவித்துள்ள மத்திய பாஜக அமைச்சர் ஷோபா கரந்தலாஜேவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுகுறித்து கருத்து தெரிவிக்க ஒருவர் என்ஐஏ அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது குண்டுவெடிப்பில் நெருக்கமாக தொடர்புடையவராக இருக்க வேண்டும். பாஜகவின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னடர்களும் நிச்சயம் நிராகரிப்பார்கள்.

பாஜகவினரின் பிரிவினைவாத அரசியல்: அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். பிரதமர் முதல் தொண்டர்கள் வரை, பாஜகவில் உள்ள அனைவரும் இதுபோன்ற பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த வெறுப்புப் பேச்சை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு உடனடியாக கடுமையான நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+