Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைக்கு இனி நோ டென்சன்.. இன்று கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இன்று கடல்­நீரை குடி­நீ­ராக்­கும் திட்­டத்தை காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னயில் கோடை காலங்களில் குடிநீர் பற்றாகுறை ஏற்படும் நிலையில் இதனை தடுக்கும் வகையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் ரூ.1516 கோடி மதிப்­பீட்­டில் ­க­டல் ­நீரை குடி­நீ­ராக்­கும் திட்­டத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்­கி­றார்.

CM Stalin is going to inaugurate the project of making sea water into drinking water

இதுகுறித்து அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன் வெளி­யிட்­டு உள்ள அறிக்கையில், "காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டம் திருப்போ­ரூர் வட்­டம், நெம்­மே­லி­யில் ரூ.1516 கோடி மதிப்­பீட்­டில், 150 மில்­லி­யன் லிட்­டர் திறன்­கொண்ட கடல்­நீரை குடி­நீ­ராக்­கும் திட்ட தொடக்க விழா இன்று 24-ஆம் தேதி காலை 10.00 மணி­ய­ள­வில் நெம்­மே­லி­யில் நடை­பெ­று­கி­றது. மாபெ­ரும் இக்­கு­டி­நீர்திட்­டத்தை தமிழ்­நாடு முதலமைச்­சர் - கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் திறந்து வைக்­கி­றார்.

இக்­கு­டி­நீர் திட்­டத்தை மூலம் சென்னை புற­ந­கர் பகு­தி­க­ளான ஆலந்­தூர், பல்­லா­வ­ரம், வேளச்­சேரி, மடிப்­பாக்­கம், உள்­ள­க­ரம் - புழு­தி­வாக்­கம், புனித தோமை­ யார்­மலை ஒன்­றி­யம் ஆகிய பகு­தி­க­ளில் வசிக்­கும் 9 லட்­சம் பொது மக்­கள் பயன் பெறு­வார்­கள். இந்த ­வி­ழா­விற்கு வருகை தரும் முதலமைச்சவர் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளுக்கு கோவ­ளம், நெம்­மே­லி­யில் திருப்­போ­ரூர் வடக்கு - தெற்கு ஒன்­றி­யம் மற்­றும் பேரூர் தி.மு.க. சார்­பில் கழ­கத்­தி­னர் திரண்டு மகிழ்ச்­சி­யு­டன் வர­வேற்பு அளிக்க உள்­ள­னர்.

மிக­வும் கோலா­க­ல­மாக - எழுச்­சி­யான வகை­யில் நெம்­மே­லி­யில் நடைபெ­றும் கடல்­நீரை குடி­நீ­ராக்கும் தொடக்க விழா­வில் காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தில் உள்ள மாவட்ட - மாந­கர - பகுதி - ஒன்­றிய - நகர - பேரூர் கழ­கச் செய­லாளர்­கள் மற்­றும் நிர்­வா­கி­கள், தலை­மைச் செயற்குழு - பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள், கழக அணி­க­ளின் நிர்வாகிகள், கழக செயல்­வீ­ரர்கள் உள்­ளிட்ட அனை­வ­ரும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கில் அணி­தி­ரண்டு வந்து பங்­கேற்­கும்படி அன்­பு­டன் அழைக்­கி­றேன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+