சென்னைக்கு இனி நோ டென்சன்.. இன்று கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இன்று கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னயில் கோடை காலங்களில் குடிநீர் பற்றாகுறை ஏற்படும் நிலையில் இதனை தடுக்கும் வகையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் ரூ.1516 கோடி மதிப்பீட்டில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் வட்டம், நெம்மேலியில் ரூ.1516 கோடி மதிப்பீட்டில், 150 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்ட தொடக்க விழா இன்று 24-ஆம் தேதி காலை 10.00 மணியளவில் நெம்மேலியில் நடைபெறுகிறது. மாபெரும் இக்குடிநீர்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்கிறார்.
இக்குடிநீர் திட்டத்தை மூலம் சென்னை புறநகர் பகுதிகளான ஆலந்தூர், பல்லாவரம், வேளச்சேரி, மடிப்பாக்கம், உள்ளகரம் - புழுதிவாக்கம், புனித தோமை யார்மலை ஒன்றியம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 9 லட்சம் பொது மக்கள் பயன் பெறுவார்கள். இந்த விழாவிற்கு வருகை தரும் முதலமைச்சவர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோவளம், நெம்மேலியில் திருப்போரூர் வடக்கு - தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் தி.மு.க. சார்பில் கழகத்தினர் திரண்டு மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளிக்க உள்ளனர்.
மிகவும் கோலாகலமாக - எழுச்சியான வகையில் நெம்மேலியில் நடைபெறும் கடல்நீரை குடிநீராக்கும் தொடக்க விழாவில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட - மாநகர - பகுதி - ஒன்றிய - நகர - பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், கழக அணிகளின் நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் பல்லாயிரக்கணக்கில் அணிதிரண்டு வந்து பங்கேற்கும்படி அன்புடன் அழைக்கிறேன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications