பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
சென்னை: பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை கீழ்பாக்கத்தில் எஸ்றா சற்குணம் உடல் காவல்துறை மரியாதையுடன் இன்று மாலை அடக்கம் செய்யப்படவுள்ளது. எஸ்றா சற்குணம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இறுதிநாள் வரை சேவையாற்றியதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இசிஐ திருச்சபையின் பேராயரும், இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவருமான எஸ்றா சற்குணம் உடல்நலக்குறைவால் கடந்த 22 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 86. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி எஸ்றா சற்குணம் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.

பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களுடன் பேராயர் எஸ்றா சற்குணம் நெருக்கமாக பழகியவர். குறிப்பாக மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோரோடு நெருக்கமான நட்பைக் கொண்டிருந்தவர். பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். பல்வேறு அரசியல் பிரபலங்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்திருந்தனர்.
மறைந்த எஸ்றா சற்குணத்தின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுவதை அடுத்து சென்னையை அடுத்த வானகரத்தில் நல்லடக்க ஆராதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
இறுதி அஞ்சலிக்கு பிறகு பேராயர் எஸ்றா சற்குணத்தின் உடல் இன்று மாலை கீழ்பாக்கம் கார்டன் காலனி பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில், எஸ்றா சற்குணம் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உடல் நலக்குறைவால் கடந்த 22ஆம் தேதி அன்று காலமான மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் பேராயர் எஸ்றா சற்குணம் (வயது 86) அவர்களது உடலுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
எஸ்றா சற்குணம் தமிழ்ச் சமூகத்திற்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, தனது இறுதி நாள் வரை தொடர்ந்து சேவை ஆற்றி வந்துள்ளார். இன்று சென்னை, கீழ்ப்பாக்கம் கார்டன் காலனியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும் அவரது உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications