லோக்சபா தேர்தல்.. பணி தொடங்கியது.. வெற்றி வாகை சூடுவோம்.. அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: லோக்சபா தேர்தல் பணி தொடங்கி விட்டதாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார். பணி முடிப்போம் வெற்றி வாகை சூடுவோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. மூன்றாவது முறையாக வெற்றி பெற்றி அரியணையை தக்க வைக்க ஆளும் பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

பாஜகவை தோல்வியடைய வைக்க எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து INDIA கூட்டணியை அமைத்துள்ளனர். தமிழ்நாட்டில் திமுக வலிமையான கூட்டணி அமைத்துள்ளது. தேர்தல் பணிக்குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, கூட்டணி பேச்சுவார்த்தை குழு என மூன்று குழுக்களை அறிவித்து விட்டது.
இந்த நிலையில் இது தொடர்பான அறிவிப்பை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின்.

தொடங்கியது #Election2024 பணி!
பணி முடிப்போம்! வெற்றி வாகை சூடுவோம்!
#INDIA வெல்லும்!
என்று பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதன் மூலம் லோக்சபா தேர்தலுக்கான பணிகள் தொடங்கி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இனி கூட்டணி பேச்சுவார்த்தைகள், தேர்தல் அறிக்கை தயாரிப்புகள் மளமளவென நடைபெறும்.












Click it and Unblock the Notifications