மிகப்பெரிய ரிஸ்க்கே இதுதான்.. உளவுத்துறையை வச்சு ஸ்டாலின் போடும் கணக்கு.. லட்டு மாதிரி சான்ஸ்!
சென்னை: குதிரை பேரம் என்று வந்துவிட்டால் டெல்லி ஆட்டம் வேறு மாதிரி இருக்கும். இதற்கு ஏற்றபடி வேட்பாளர்கள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும். மிகப்பெரிய ரிஸ்க்கே இதுதான். இதற்காகவே வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஸ்டாலின் கவனமாக இருக்க வேண்டும் என்ற திட்டத்தில் உள்ளாராம்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. ஏப்ரல் இரண்டாம் வாரம் சட்டசபை தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆளும் திமுக ஒரு பக்கம் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. காங்கிரசுக்கு 31 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதே சமயம் திமுக தனது உதய சூரியன் சின்னத்தில் 170 இடங்களில் போட்டியிட திட்டமிடுகிறது. அப்படி நடந்தால் தனிப்பெரும்பான்மை பெறலாம் என்ற திட்டத்தில் திமுக உள்ளதாம். அதே சமயம் ஒருவேளை தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்ற யோசனையும் திமுக பக்கம் உள்ளதாம்.
களமிறக்கப்படும் உளவுத்துறை
இதற்காகவே உளவுத்துறையை களமிறக்க ஆளும் திமுக தரப்பு முடிவு செய்துள்ளதாம். சில விஷயங்களை கண்டிப்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு டீம் களமிறக்கப்பட்டு உள்ளது. பின்வரும் முக்கியமான விஷயங்கள் குறித்து உளவுத்துறை பல்வேறு விசாரணைகளை, கள ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது
1. தவெக யாருடைய வாக்குகளை பிரிக்கும் என்பது முக்கிய விஷயம்.. அதாவது தவெக எதிர்கட்சி வாக்குகளை பிரித்தால் அது திமுகவிற்கு பெரிய அளவில் சாதகமாக அமையும். அது கிட்டத்தட்ட திமுகவிற்கு லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பாக இருக்கும்.
2. அதுவே தவெக ஆளும் கட்சி வாக்குகளை பிரித்தால்.. உதாரணமாக சிறுபான்மையினர் வாக்குகளை பிரித்தால் அது அதிமுகவிற்கு பெரிய அளவில் சாதகமாக அமையும். அது கிட்டத்தட்ட திமுகவிற்கு எதிராக செல்லும்.
3. கிறிஸ்துவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் வாக்குகளை பிரித்தால் திமுகவிற்கு அது சிக்கல். மிகப்பெரிய ரிஸ்க்கே இதுதான்.
4. தவெக 20% வாக்குகளை எடுத்தால் பல இடங்களில் முடிவுகள் மாறும். இதனால் தொங்கு சட்டசபை கூட உருவாகும். களம் அப்படியே மாறும்.
5. தொங்கு சட்டசபை உருவானால்.. ஒவ்வொரு எம்எல்ஏவும் முக்கியம். குதிரை பேரன்கள் நடக்கும் கொடுமை ஏற்படும். குதிரை பேரங்கள் நடந்தால் அது ஆளும் திமுகவிற்கு நெருக்கடியை கொடுக்கும்.
6. குதிரை பேரம் என்று வந்துவிட்டால் டெல்லி ஆட்டம் வேறு மாதிரி இருக்கும். இதற்கு ஏற்றபடி வேட்பாளர்கள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும். மிகப்பெரிய ரிஸ்க்கே இதுதான். இதற்காகவே வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஸ்டாலின் கவனமாக இருக்கிறாராம்.
7. காங்கிரசில் வேட்பாளர்களை இறக்கினால்.. அவர்கள் தொங்கு சட்டசபை வந்தால் பாஜக பக்கம் செல்ல கூடாது. அது கட்சி தாவல் தடை சட்டத்தை கொண்டு வர வழிவகுக்கும். மீண்டும் சில இடங்களில் இடைத்தேர்தல் வரலாம். அதனால் காங்கிரஸ் வேட்பாளர்கள் பற்றியும் உளவுத்துறை ரிப்போர்ட் எடுக்கும்.. பாஜக உடன் யாரெல்லாம் நெருக்கம் என்று கணக்கு எடுக்கும்.
8. இன்னொரு பக்கம் எங்கெல்லாம் தவெக அதிகமாக திமுக வாக்குகளை பிரிக்கிறது என்றும் சர்வே எடுக்கப்பட்டு களப்பணிகள் மாற்றப்படும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள் .
-
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்.. ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.. செங்கோட்டையன் விளக்கம் -
காங்கிரஸுக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கும் போல.. கேரளாவில் வினோத பிரச்சனை.. தோல்வி உறுதி? -
திருப்பூர் வடக்கில் சத்யபாமா.. 234-க்கு 23 பெண் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்த விஜய்! -
கூட இருந்தவரை ஆனந்த கண்ணீர் விட வைத்த விஜய்! தவெக மேடையில் அரங்கேறிய காட்சிகள்? யாரிந்த சபரிநாதன்? -
எம்எல்ஏன்னா சும்மா இல்லை! 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் யார்? விஜய் டிக் அடித்த நிர்வாகிகள் -
Vijaykanth: திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக! விஜயகாந்த் கட்சியை விஜய் இப்படி பேசலாமா? -
41 பேரை பலி கொண்ட கரூர் நெரிசல்..ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வந்த மதியழகனுக்கு சீட் கொடுத்த தவெக விஜய் -
ரூ. 20 லட்சம் கடன் தருவோம்.. இளைஞர்களை ஈர்க்க மேஜர் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்த தவெக தலைவர் விஜய்! -
தவெக-வில் சேர்ந்த 3 நாளில் எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய்.. உதயநிதி தொகுதியில் களமிறங்கும் செல்வம்! -
திமுகனாலும்.. தவெகனாலும்.. சீட்டுகளை அள்ளும் மாஜி அதிமுக தலைகள்! விஜய் லிஸ்ட்டில் யார் யார் பாருங்க! -
ஜனநாயகன் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்.. ரஜினிக்கு பயந்து இந்த முடிவா? கடைசியில் இப்படி ஆகிடுச்சே!











Click it and Unblock the Notifications