பொள்ளாச்சி வழக்கு! மானமிருந்தால் வெட்கி தலைகுனியட்டும்! "சார்"களுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
சென்னை: பொள்ளாச்சி வழக்கில் பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது!

அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த 'சார்'கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை காரில் பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கி 9 பேர் சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான பெண்ணின் அலறல் ஆடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மணிவண்ணன், பைக் பாபு, அருண்குமார், அருண்குமார், அருளானந்தம், ஹோரோநிமல் பால், வசந்தகுமார், சதீஷ், திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார். அதன்படி அவர்களுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ரூ 85 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனை பெற்ற 9 பேரும் உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்சநீதிமன்றத்திலோ மேல்முறையீடு செய்யலாம். வழக்கின் தன்மையை பொருத்து அந்த நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கலாம்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். அவ்வறு செய்யும் போது சென்னை உயர்நீதிமன்றம், டெல்லி உச்சநீதிமன்றம் வழக்கின் தன்மையை பொருத்து தீர்ப்பு வழங்கப்படலாம்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications