CM Vijay: "சி.ஜோசப் விஜய் எனும் நான்".. பாகுபலி சீனை ரீ க்ரியேட் செய்த முதல்வர்
சென்னை:தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. இதில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. விஜய் இன்று முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். கோட், சூட்டுடன் மேடையேறிய விஜய் ஆண்டவன் மீது ஆணையாக என்று சொல்லி பதவியேற்றுள்ளார். சி. ஜோசப் விஜய் எனும் நான் என்று அவர் சொல்லும்போது அரங்கம் ஆரவாரத்தால் அதிர்ந்தது. பாகுபலி படத்தின் காட்சியை நேரு ஸ்டேடியத்தில் ரீ - கிரியேட் ஆனது.
தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்ற நிகழ்வு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் விஜய்யுடன் முக்கிய அமைச்சர்களும் பதவியேற்றனர். தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், பொருளாளர் வெங்கட்ராமன், துணைப்பொதுச் செயலாளர் நிர்மல்குமார், செய்தி தொடர்பாளர் ராஜ்மோகன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

காரைக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற டாக்டர் டிகே பிரபு, சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்ற கீர்த்தனா ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராகுல் காந்திக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்பட்டது. விஜய் வழக்கமான உடைகளுக்கு பதிலாக கோட், சூட்டுடன் விஜய் முதல்வராக பதவியேற்றார்.
விஜய்யை முதல்வராக பதவியேற்க வருமாறு மேடையில் அறிவிக்கப்பட்டதில் இருந்து அரங்கத்தில் ஆரவாரம், விசில் சத்தம் அதிர வைத்தது. பாகுபலி படத்தில் மன்னராக பதவியேற்கும்போது அரங்கம் அதிரும் காட்சி மிகவும் பிரபலம். அதேபோல விஜய் முதல்வராக பதவியேற்கும்போது, சி. ஜோப் விஜய் எனும் நான் என்று அவர் பதவியேற்கும்போது அரங்கம் அதிர்ந்தது. பாகுபலி படக்காட்சியை நேரு ஸ்டேடியத்தில் ரீ - கிரியேட் செய்தார் விஜய்.












Click it and Unblock the Notifications