இனி வரும் நாட்களில் வழக்கத்திற்கு மாறாக வெக்கையாக இருக்கும்.. வானிலை மையம் தகவல்!
சென்னை: கடலோர மாவட்டங்களில் வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக வியர்வை அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறுகையில், தென் தமிழகம் மற்றும் அதனையொட்டி பகுதியில் 1.5 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று (ஏப் 22) மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

இடி மழை
ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அடுத்த நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

அதிகம்
கடலோர மாவட்டங்களில் காற்றில் ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும் இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். இதனால் மக்கள் காற்றோட்டமான இடங்களில் இருக்குமாறும் தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

48 மணி நேரம்
தேவைக்குஏற்ப குடிநீக், இளநீர், மோர் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழவகைகளை அதிகமாக உட்கொள்ளவும், வெள்ளை மற்றும் வெளிர் வண்ணக் கதர் ஆடைகளை அணிவது சிறந்தது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஈரப்பதம்
அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். காற்றில் ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலை 4 முதல் 5 டிகிரி வரை அதிகமாக உணரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications