மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பரபரப்பு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2 பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி ஒருவர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

மாணவி பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், காவல்துறையினரின் விசாரணைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது என்றும் கூறியுள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழக உள் புகார்க் குழுவினரும் மாணவியின் பாலியல் புகார் குறித்து விசாரித்து வருகிறார்கள் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

anna university crime


இது தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பிரகாஷ் கூறியிருப்பதாவது:- சென்னை அண்ணா பல்கலைக்கழக, கிண்டி பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், ராஜா அண்ணாமலைபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், மாணவி தனது ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தின் பின்புறம் பேசிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் இருவரையும் அச்சுறுத்தியதாகவும் பின்னர் அதே நபர்கள் தன்னுடைய நண்பரை தாக்கிவிட்டு தன்னை பாலியல் சீண்டலுக்கு முயன்றதாக மாணவி காவல் நிலையத்தில் 24.12.2024 அன்று புகார் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் உரிய வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள். கோட்டூர்புரம் காவல் நிலைய உதவி ஆணையர் தலைமையில், ஆர்.ஏ.புரம் மகளிர் காவல் நிலையக் குழுவினருடன் வழக்கை தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக உள் புகார்க் குழுவினருக்கும் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டு, குழுவின் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை உயர் அலுவலர்கள் அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அதனடிப்படையில் பல்கலைக்கழக நிர்வாகம் காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.

பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியாளர்கள் எப்போதும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக்கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தினைப் பொறுத்தவரை முதன்மையான அனைத்து மாணவர்களின் முன்னுரிமையாக தெரிவித்துக்கொள்கிறோம். குற்றவாளிகளை பாதுகாப்பு எப்போதுமே உள்ளது என்பதை விரைவில் கண்டறிந்து கைது செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அலுவலர்கள் உறுதியளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+