மாணிக்க தாகூரை வைத்து கேம் ஆடி வரும் காங்... கிடைக்கப் போவது விருதுநகரா, சிவகங்கையா, அல்வாவா!
மாணிக்க தாகூர் போட்டியிடும் இடம் எது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
சென்னை: யார்தான்ப்பா போட்டியிட போறாங்க.. இளங்கோவனா? மாணிக்தாகூரா? என்னதான் நடக்குது? விருதுநகர் தொகுதியை அனைவரும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
திருநாவுக்கரசர் திருச்சிதான் வேண்டும் என்று அடம்பிடிக்கவும் ராகுல் தலையிட்டு அதற்கு திமுகவிடம் சிபாரிசு செய்தார். இருந்தாலும் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. அதேபோல கிருஷ்ணகிரியை செல்லக்குமார் கேட்கவும் அதற்கும் ஓகே ஆவது போல தெரிகிறது.
இதனால் ஈவிகேஎஸ் நிலைமையோ பரிதாபமாகிவிட்டது. ஈரோட்டில் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தாலும், கிருஷ்ணகிரி அல்லது விருதுநகர் இந்த இரண்டில் ஒன்று கேட்கலாம் என முடிவு செய்திருந்தார். ஆனால் கிருஷ்ணகிரி சிக்கல் என்பதால் விருதுநகரை கணக்கு பண்ணியிருந்தார்.
முருகனை இறக்கிவிட்டு மயிலை கையில் எடுத்த ஓபிஎஸ்.. என்னதான் நடக்கிறது பெரியகுளத்தில்
நெருங்கிய நண்பர்
ஆனால் விருதுநகரை இளங்கோவனுக்கு ஒதுக்க காங்கிரஸ், திமுக இரண்டுமே விரும்பவில்லை. இதனிடையே ராகுலின் நெருங்கிய நண்பர் மாணிக்கதாகூர் விருதுநகரில் நிறுத்தப்படலாம் என்ற பேச்சு எழுந்தது.
டென்ஷன்
ஆக மொத்தம், கேட்ட தொகுதி கிடைக்காததால் இளங்கோவன் டென்ஷன் ஆகி, தனது ஆதரவாளர்களையும் மாணிக்தாகூருக்கு எதிராக கிளப்பி விட்டுள்ளாராம். அதன்படியே உள்ளடி வேலைகள் கனக்கச்சிதமாக நடக்க.. விஷயம் டெல்லிக்கும் பறந்திருக்கிறது. போட்ட பிளான் ஓரளவு ஒர்க் அவுட் ஆனதால், எப்படியும் விருதுநகர் தனக்கு கிடைத்துவிடும், சிவகங்கைக்கு வேண்டுமானால் மாணிக்கதாகூர் போட்டியிடட்டும் என்று இளங்கோவன் ஏறத்தாழ முடிவு செய்துவிட்டாராம்.
சிவகங்கை
விருதுநகர் தொகுதிக்குள் தனக்கு எதிராக இத்தனை வேலைகள் நடக்கிறதா என்று ஷாக் ஆன மாணிக்க தாகூரோ, போட்டியிட்டால் விருதுநகர்தான் என்று ஒற்றை காலில் நிற்கிறாராம். இதனிடையே சிவகங்கையில் ஒரு மல்லுக்கட்டு நடந்து வருகிறது.
ப.சிதம்பரம்
அது என்னவென்றால், ப.சிதம்பரத்துக்கு எதிரான குரூப் ஒன்று, திரும்பவும் கார்த்தி சிதம்பரம் போட்டியிட கூடாது என்று கங்கணம் கட்டி கொண்டுள்ளது. பேசாமல் கார்த்தி சிதம்பரத்துக்கு பதிலாக மாணிக்கதாகூரையே சிவகங்கையில் நிறுத்தலாம் என்று டெல்லி லாபியிடம் விலாவரியாக எடுத்து சொல்லி வருகிறது.
எந்த தொகுதி?
இந்த விவகாரத்தில் இப்போது மாட்டி கொண்டு முழிப்பது மாணிக்கதாகூர்தான் என்று சொல்லப்படுகிறது. எங்கே நம்மை சிவகங்கையில் நிறுத்திவிட்டு, விருதுநகரை கிடைக்காமல் செய்துவிடுவார்களோ என்று இப்போதே பீதி கிளம்பி உள்ளதாம்!