EXCLUSIVE: நிதிஷ் போனது ‘இந்தியா’க்கே நல்லது.. காங்கிரஸ் தியாகம் செய்யவும் தயார் - பீட்டர் அல்போன்ஸ்
சென்னை: தேர்தலுக்கு முன்னரே நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, அர்விந்த் கெஜ்ரிவால் அடையாளம் காணப்பட்டது இந்தியா கூட்டணிக்கு சாதகம்தான் என காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநில சிறுபான்மை ஆணையத் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
கேள்வி: 2024 மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரலில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி எப்படி தயாராகி உள்ளது?

பதில்: காங்கிரஸ் கட்சியின் முதல் வேலை மதச்சார்பற்ற சக்திகளை இந்தியா முழுவதும் ஒருங்கிணைப்பது. அந்த அடிப்படையில் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட சக்திகள், மாநில உரிமைகளில் நம்பிக்கை கொண்ட சக்திகள், சமூக நீதியில் நம்பிக்கை கொண்ட சக்திகள், மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்ட அரசியல் சக்திகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு என பொது மேடையை உருவாக்கி அந்த அடிப்படையில் தேர்தலை சந்திப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் வியூகம். இதற்காக பல தியாகங்களை சந்திக்கவும் காங்கிரஸ் தயாராக உள்ளது.
பல மாநிலங்களில் இதுபோன்ற அரசியல் கட்சிகளுக்கும் காங்கிரஸுக்கும் இடையே இடங்களை பங்குபோடுவதில் போட்டி இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சிகளிடம் சமரசம் செய்து எல்லோரையும் உள்வாங்கி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது. இதற்காக பேச்சுவார்த்தை நடத்த குழுக்கள் மாநில வாரியாக அமைக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டிலும் தேர்தல் குழு அமைக்கப்பட்டு உள்ளன. முதல் கூட்டத்தை முடித்து அடுத்த கட்டத்துக்கு தயாராக உள்ளோம். எனவே நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்களும், தலைவர்களும் ஒரே முகமாக தேர்தலை சந்திப்போம்.
கேள்வி: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறி பாஜகவுடன் கூட்டணி சேரப்போவதாக தகவல் வருகிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாகவும், பஞ்சாபில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுவதாகவும் அறிவித்து உள்ளன. இது இந்தியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா?
பதில்: நீங்கள் சொல்லும் 3 பேருமே பல காலகட்டங்களில் காங்கிரஸுடன் சேர்ந்து பணியாற்ற முன் வரவில்லை. கடந்த காலங்களில் இதே மம்தா பானர்ஜி, அர்விந்த் கெஜ்ரிவால், நிதிஷ் குமார் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் நெருக்கடி நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு முதன்மையான இடம் கிடைக்காதா என்று நினைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி தங்கள் அடையாளங்களை முழுமையாக தொலைத்துவிட முடியாத அளவுக்கு அடிப்படைக் கொள்கைகளில் எல்லாவற்றையுமே சமரசம் செய்துகொள்ள முடியாது.
இவர்களோடு சேர்ந்து களம் காண்பது வரவர நமக்கு எவ்வளவு ஆபத்தானது என்று தெரிய வருகிறது என்று சொன்னால், தேர்தலுக்கு முன்னரே இப்படி நிதானமற்றவர்களாக இருப்பவர்கள், தேர்தல் முடிந்த பின்னர் எப்படி இருப்பார்கள்? இவர்களை நம்பி எப்படி ஆட்சியமைக்க முடியும்? என்ற கேள்விகள் எல்லாம் வருகின்றன. எனவே இதுபோன்ற நபர்களை தேர்தலுக்கு முன்னரே அடையாளம் கண்டிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக முடியும் என்று எண்ணுகிறேன்.
இவர்கள் இல்லாமலேயே பாஜகவையும், வலதுசாரி பாசிச மதவாதத்தையும் வேறோடும் வேறடி மண்ணோடும் வெட்டி வீழ்த்த வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த தியாகத்துக்கும் தயாராக இருப்பார்கள். அவர்களை நம்பித்தான் தேர்தலை எதிர்கொள்ள முடியும். மதில்மேல் பூனை என்ற நிலையில் இருக்கும் இவர்களை நம்பி தேர்தலை சந்திக்க முடியாது. அந்த சவாலை காங்கிரஸ் சந்திக்க தயாராக உள்ளது. முடிவுகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வோம். இவர்களின் உண்மையான முகத்தை மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டுவோம். நிச்சயமாக மக்கள் நல்லதொரு தீர்ப்பு அளிப்பார்கள் என்று நம்புவோம்." என்று தெரிவித்தார்.
-
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா!












Click it and Unblock the Notifications