"ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதில் உறுதியாக உள்ளோம்”.. திமுகவுக்கு நெருக்கடி தரும் கே.எஸ்​.அழகிரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் தொண்​டர்​கள் ஆட்சி அதி​காரத்​தில் பங்கு வேண்​டும் என விரும்புகி​றார்​கள், அதில் நாங்​கள் உறு​தி​யாக உள்​ளோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்​னாள் தலை​வர் கே.எஸ்​.அழ​கிரி தெரி​வித்​துள்​ளார். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் காங்கிரஸ் தலைவர்கள் திமுகவுக்கு நெருக்கடி தரும் வகையில் பேசி வருவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரு​வாரூரில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய கேஎஸ் அழகிரி, "ஒவ்​வொரு அரசி​யல் கட்​சி​யும் வளர வேண்​டும், அதி​காரத்​தில் பங்கு வேண்​டும் என சொல்​வது நியாய​மானது. இதை காங்​கிரஸ் கட்சி மட்​டும் சொல்​ல​வில்​லை. வைகோ, திரு​மாவளவன் மற்​றும் கம்​யூனிஸ்ட்களும் அதிக தொகு​தி​கள் ஒதுக்க வேண்​டும் எனக் கூறி​யுள்​ளனர். அதனால் அதிகாரத்தில் பங்கு, அதிக தொகுதிகளை எதிா்பாா்ப்பதாக காங்கிரஸூம் கூறுகிறது.

Congress dmk ks azhagiri

எங்​களைப் பொறுத்​தவரை திமுக எங்​களுக்கு சிறந்த தோழமைக் கட்​சி. நாங்​கள் அவர்களிடம் பேரம் பேசத் தேவை​யில்​லை. சிறந்த ஆட்​சியை முதல்​வர் ஸ்டா​லின் வழங்கி வரு​கி​றார். அதற்​காக எங்​கள் கட்சி கீழே​ போக வேண்​டும் என்று நாங்​கள் விரும்​ப​வில்​லை. நண்​பர்​களாக இருக்​கிறவர்​களில் ஒரு​வர் நல்ல சட்டை போட்​டுள்​ளார். அதே​போல, எனக்​கும் ஒரு சட்டை கொடு என்று கேட்​பது தவறு இல்​லை. அதற்​காக அவர் போட்​டிருக்​கிற சட்டையைப் பறிக்க வேண்​டும் என்​பது நோக்​கமில்​லை.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணிக்கு தலைமை தாங்கும் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும், எங்களுக்கு அதிக இடங்கள் வேண்டும், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என நாங்கள் கேட்பதில் தவறில்லை. அதற்காக இந்த கூட்டணியை விட்டு நாங்கள் போய்விடுவோம் என்கிற மாயையை உருவாக்குகின்றனா். திமுக கூட்டணியை ஆதரிக்கிறோம்.

அதி​முகவை பொறுத்​தவரை விளிம்பு நிலைக்குச் சென்​று​விட்​டது. தமி​ழ​கத்​தின் உரிமை​யைப் பற்றி அவர்​களால் பேச முடிய​வில்​லை. அமித் ஷா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்​கும் என்​கின்​றார். ஆனால், எடப்பாடி பழனி​சாமி அதி​முக தலை​மையி​லான ஆட்சி அமை​யும் என்​கி​றார். அந்த கூட்​ட​ணி​யைப் பொறுத்​தவரை, எங்களைப் போன்ற தெளிவு இல்​லை. கருத்து உடன்​பாடு கூட அவர்​களிடம் இல்​லை." எனத் தெரி​வித்​தார்​.

மேலும் பேசிய கேஎஸ் அழகிரி, "சென்சார் மட்டும் தரவில்லை என்றால் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தாமதித்தால், அது பின்விளைவுகளை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அழகிரி, திமுக கூட்டணியில் இருந்துகொண்டு கூறிய இந்தக் கருத்து அரசியல் ரீதியாக பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய் நடித்துள்ள'ஜனநாயகன்' திரைப்படம் வரும் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தணிக்கைச் சான்றிதழ் இதுவரை வழங்கப்படாதது படக்குழுவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் முதல்நாள் காட்சி முன்பதிவு தொடங்காததும் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. படத் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த அவசர மனுவில், பட வெளியீடு தாமதமாகும் அபாயம் உள்ளதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+