Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எச்.வசந்தகுமார் உடலுக்கு தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி - இன்று சொந்த ஊரில் இறுதிச்சடங்கு

எச். வசந்தகுமாரின் உடல் சத்தியமூர்த்தி பவனில் இன்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த காங்கிரஸ் எம்.பி எச். வசந்தகுமாரின் உடல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து தி. நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. உறவினர்கள், வசந்த் அன் கோ ஊழியர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். சில மணி நேர அஞ்சலிக்குப் பின்னர் சென்னை காமராஜர் அரங்கில் தலைவர், தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சில மணிநேரங்கள் வைக்கப்பட்டது. இன்று அவரின் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    எச்.வசந்தகுமார் உடலுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி

    பொதுமக்களின் பார்வைக்காக சனிக்கிழமை காலை காமராஜர் அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. வசந்த குமார் உடலுக்கு தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் அவரது சொந்த ஊரில் இன்று இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    Congress workers pay tribute to H. Vasanthakumar - Funeral on hometown

    கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்த, கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி எச். வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இவருக்கு நெஞ்சு பகுதியில் சளி அதிகமாக இருந்த காரணத்தாலும், நுரையீரல் பகுதியில் தொற்று இருந்த காரணத்தாலும் உடல் நிலை மோசம் அடைந்தது. இதனால் இவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரின் உடன் தொடர்ந்து இதனால் நலிவடைந்து வந்தது. இன்று அவரின் உடல்நிலை மோசம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்த நிலையில் அவரின் மறைவை தொடர்ந்து வசந்த குமாருக்கு மீண்டும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது.

    வசந்த குமாருக்கு கொரோனா நெகட்டிவ் வந்த நிலையில், அவரின் உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வசந்தகுமாரின் உடல் மருத்துவமனையில் இருந்து தி.நகர் வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்ட பின்னர் உறவினர்களும், பணியாளர்களும் அஞ்சலிசெலுத்தினார்கள்.

    வசந்தகுமார் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக நேற்று காலையில் பொதுமக்கள் பார்வைக்காக வசந்தகுமார் உடல் வைக்கப்பட்டது. கட்சித்தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் வசந்தகுமார் உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.

    சொந்த ஊரில் தொகுதி மக்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+