சென்னையில் நடு ரோட்டில் ரூ.2000 கோடியுடன் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி.. குவிந்த பொதுமக்கள்
Recommended Video

சென்னை: அமைந்தகரை பகுதியில் ரூ.2,000 கோடியுடன் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி பரபரப்பை ஏற்படுத்தியது.
2016ம் ஆண்டு மே 13ம் தேதி, வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டபோது, 3 கன்டெய்னர் லாரிகளில், ரூ.570 கோடியை பறிமுதல் செய்தனர்.
பணத்துக்கு பாதுகாப்பாக காரில் வந்த நபர்களிடம், அதற்கான ஆவணங்கள் இல்லை. போலீசாரின் விசாரணையில், கன்டெய்னர் லாரிகளின் பதிவு எண்கள் போலியானவை என்பது தெரியவந்தது.

எஸ்பிஐ பணம்
சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பணத்தின் உரிமையாளரை, காப்பாற்ற, மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், எஸ்பிஐ வங்கி அது தங்கள் பணம் என கூறியது. மர்மமான இந்த வழக்கு, சென்னை ஹைகோர்ட் உத்தரவை தொடர்ந்து, சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது.

ரிசர்வ் வங்கி பணம்
இந்த நிலையில், மைசூரில் இருந்து சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான நோட்டுகளை ஏற்றிக்கொண்டு சென்னை ரிசர்வ் வங்கிக்கு கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. நேற்றிரவு அமைந்தகரை பகுதியில் வந்தபோது அந்த லாரி திடீரென பழுதாகி நின்றது. கியர் பாக்சில் பழுது ஏற்பட்டது தெரியவந்தது.
அதை உடனே சரிசெய்ய முடியாததால் கன்டெய்னர் லாரி சாலையின் நடுவில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பணத்துடன் நின்று கொண்டிருந்தது.

வேடிக்கை கூட்டம்
லாரியை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நின்றனர். இதை பார்த்த மக்கள் அதிசயித்தனர். தகவலறிந்த பொதுமக்கள் அங்கு வேடிக்கை பார்க்க திரண்டனர். பொதுமக்கள் கூடியதால் லோக்கல் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்புக்காக விரைந்து வந்தனர்.

திடீர் பரபரப்பு
லாரி பாதுகாப்பாக வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பணம் இருந்த கன்டெய்னரை யாரும் நெருங்கிவிடாமல் இருக்க கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றியபடி கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்பின்னர் மீட்பு வேன் அங்கு வரவைக்கப்பட்டு, கன்டெய்னர் லாரி ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சுமார் ஒருமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications