இன்னும் முழுசா நண்பர்கள் ஆகலையாம்.. உள்ளுக்குள் புகையும் அதிமுக பாமக பகை.. இதென்ன கலாட்டா?
பாமகவின் பழைய விவகாரங்களை அதிமுக இன்னமும் மறக்கவில்லை என தெரிகிறது.
Recommended Video

சென்னை: நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம் ஒன்னு இருக்கு.. என்ன தெரியுமா? பாமக மீது அதிமுக இன்னமும் கோபத்தில்தான் உள்ளதாம்.. பழைய விஷயங்களை மறக்காமல் இன்னும் சில முக்கிய புள்ளிகள் செம காண்டில் இருக்கிறார்களாம்! இதற்கு ஒரு உதாரணமும் நடந்திருக்கிறது!
தருமபுரியின் தற்போதைய சிட்டிங் எம்பி அன்புமணி ராமதாஸ். 2014 தேர்தலில் போட்டியிட்டபோது, தர்மபுரி மொரப்பூர் ரயில் திட்டம் கொண்டு வருவேன் என்று தொகுதி மக்களிடம் அன்புமணி ராமதாஸ் வாக்குறுதி தந்திருந்தார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, சதானந்த கௌடா, பியூஸ் கோயல் ஆகிய 3 பேரையும்18 முறை அன்புமணி ராமதாஸ் சந்தித்திருக்கிறார்.
இப்போது மொரப்பூர் ரயில்பாதை திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வந்திருந்தார். தமிழக அமைச்சர்கள் சார்பில் தங்கமணி, கே.பி. அன்பழகன் உள்ளிட்டோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

கே பி அன்பழகன்
அந்த சமயத்தில் ஆளுயர மாலை ஒன்றை பியூஷ்கோயலுடன் சேர்த்து அமைச்சர்களுக்கும் சேர்த்து அன்புமணி அணிவிக்க வந்தார். அப்போது தங்கமணி, பியூஷ்கோயலுக்கு மட்டுமே மாலைக்குள் இருந்தனர். கேபி.அன்பழகனுக்கும் சேர்த்து அந்த மாலையை போட முடியாமல் விட்டது.

பியூஷ்கோயல்
இதனைதொடர்ந்து அறிவிப்பு பலகை திறக்கப்படும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான பட்டனை அமைச்சர்கள் ஒன்றாக அழுத்துகிறார்கள். அந்த சமயத்தில் கேபி அன்பழகன் ஒதுங்கி நிற்க முயற்சிக்கிறார். இதனால் அவரது கையை பிடித்து அன்புமணி இழுத்து பியூஷ் கோயல் பக்கத்தில் நிற்க வைக்க முயற்சி செய்தார். ஆனால் கேபி அன்பழகன் அதை நிராகரித்தார். இதை அங்கிருந்த அதிமுக, பாமக தொண்டர்கள் எல்லாருமே பார்த்து அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தார்கள்.

ஊழல் பட்டியல்
இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? அதிமுக அரசு மீது 18 வகையான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, 200 பக்க புத்தகத்தை பட்டியலாக ரோசய்யாவிடம் பாமக தந்தது அல்லவா? அதில் இருந்த முக்கியமானவர்களில் ஒருவர் கேபி அன்பழகனும்கூட!

புகைச்சல்
அதனால்தான் பழைய பகையை இன்னும் அதிமுக தரப்பில் முக்கிய புள்ளிய மறக்காமல், மறக்க முடியாமல் இருக்கிறார்களாம். கூட்டணி அறிவித்து நிலைமை சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படி புகைச்சல் இன்னமும் இருக்கிறதே, தொகுதிகளில் வேலை நடக்கும்? இதனால் தொண்டர்களின் மன நிலைமை என்னாகும் என்றெல்லாம் புதுசாக குழப்பமாக ஆரம்பித்துள்ளதாம்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications