யார் நாங்களா.. இல்லவே இல்லை.. எடப்பாடி பழனிசாமி புகாருக்கு வரிந்து கட்டி வந்த அமைச்சர்!
சென்னை: கொரோனாவால் இறந்தவரின் உடலை உறவினர்களிடம் அப்படியே ஒப்படைத்ததால் தனது சொந்த ஊரின் அருகே உள்ள கிராமத்தில் 80 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்தார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து வருகிறது. நேற்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த கிராமத்தினருக்கு கொரோனா ஏற்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: எனது ஊரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மயிலம்பாடி கிராமம். இங்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவரின் உடலை சுகாதாரத்துறையினர் கொடுத்துள்ளனர்.

எடப்பாடி புகார்
வீட்டிற்கு எடுத்து வந்து சடங்கு செய்தார்கள். உற்றார் உறவினர்கள் எல்லாம் துக்க நிகழ்ச்சிக்கு போனார்கள். பிறகு நான்கு நாட்கள் கழித்து இருமல், காய்ச்சல் வருகிறது. கிட்டத்தட்ட 126 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 80 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது என்றார்.

கொரோனா உடல்
இதற்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் உடலை அப்படியே ஒப்படைப்பதால் கொரோனா பரவுவதாக கூறினார். அண்மை காலங்களில் இப்படி கொரோனா தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்தவர்களுக்கு, மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதா என்பதை பரிசோதித்த பிறகு தான், அவரது உடல் ஒப்படைக்கப்பட்டு, உறவினர்களிடம் பாதுகாப்பாக கொண்டு சென்று சேர்க்கப்படுகிறது. இந்த தகவலை எதிர்க்கட்சி தலைவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

புள்ளி விவரம்
எங்கள் ஆட்சி வெளிப்படைத்தன்மையான ஆட்சி என்று முதல்வர் ஸ்டாலின், ஆட்சிபொறுப்பை ஏற்ற உடனே தெரிவித்தார். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில், ஒரு துறைசார்ந்த அதிகாரி ஒரு புள்ளி விவரத்தையும், மருத்துவ துறை சார்ந்த அதிகாரி ஒரு புள்ளி விவரத்தையும் இறப்பு விகிதத்தில் கூறினார்.

சோதனை செய்கிறோம்
அந்த இறப்பு விகிதத்தில் ஒரு சர்ச்சை உருவாகியது. அந்த சர்ச்சையினால் துறை சார்ந்த செயலாளரே மாற்றப்பட்ட நிலையெல்லாம் இருந்தது என்பதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்த ஆட்சியை பொறுத்தவரை இறந்த உடன் மீண்டும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தான் அவர்களின் உடல் வழங்கப்படுகிறது. எனவே கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை அப்படியே உரியவர்களிடம் ஒப்படைத்து கொரோனா தொற்று பரவல் ஏற்பட இந்த ஆட்சி காரணமாக இல்லை." என்று கூறினார்.
-
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக











Click it and Unblock the Notifications