வெளிநாடுகளில் இருந்து மருந்து பொருட்கள்.. பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைப்பு
சென்னை: வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட மருத்துவ பொருட்கள் பெரும்பாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. தற்போது நாட்டில் தினசரி மூன்று லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவுக்கு உதவ பல்வேறு நாடுகளும் முன் வந்துள்ளன. அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் இந்தியாவுக்குத் தேவையான மருத்துவ பொருட்களை அனுப்பி வருகின்றன.

17 ஆண்டுகளில் முதல்முறை
கடந்த 17 ஆண்டுகளில் வெளிநாடுகளின் உதவிகளை இந்தியா ஏற்பது இதுவே முதல்முறையாகும். இதுவரை மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மாஸ்க்குகள் என மொத்தம் 40 லட்சம் மருத்துவ பொருட்களை இந்தியா பெற்றுள்ளது. அவை நாடு முழுவதும் உள்ள 86 மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்டுள்ள மருத்துவ பொருட்கள் பெரும்பாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவமனைகளுக்கே அனுப்பப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து உதவி
முதல்கட்டமாக ஐக்கிய அமீரகத்திலிருந்து 20 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் குஜதார் மாநிலத்திற்கு வந்தடைந்துள்ளது. அமெரிக்காவிலிருந்து 5ஆம் கட்டமாக 545 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியா வந்தடைந்தது. அதேபோல பிரிட்டன் நாட்டிலிருந்து சிறப்பு விமானம் மூலம் 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னை வந்தடைந்தது. மேலும், குவைத் நாட்டிலிருந்தும் 60 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியாவுக்கு வந்துள்ளது.

சமமாக அனுப்பி வைத்துள்ளோம்
கொரோனா 2ஆம் அலையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள டெல்லியில் இருக்கும் 8 மருத்துவமனைகளில் 6 மருத்துவமனைகளுக்கு இந்த மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் கூறுகையில், அனைத்து மாநிலங்களுக்கும் சமமாகவே மருத்து பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

எந்த மாநிலங்களுக்கு முன்னுரிமை
முதலில் மாநிலங்களுக்குத் தேவையான மருத்து பொருட்கள் எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் அனுப்பப்பட்டன. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கு தேவைக்கு ஏற்ப மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எவ்வளவு அடி வாங்கியும் திருந்தல.. வாயை விடும் பாக். அமைச்சர்! இந்தியாவின் ஒரு தாக்குதலுக்கு தாங்காது -
SC, ST இட ஒதுக்கீடு இரண்டு மடங்கு உயர்வு.. மாநில அரசு எடுத்த மிக முக்கியமான முடிவு -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது












Click it and Unblock the Notifications