காவல் உதவி ஆணையருக்கு கொரோனா... கலக்கத்தில் கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்கள்
சென்னை: சென்னை பூக்கடை காவல் நிலைய உதவி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் கொரோனா வைரஸ் காற்றை விட வேகமாக பரவிவருவதால் நாளுக்கு நாள் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் முன்களப் பணியாளர்களை இந்த நோய் அண்மையில் அதிகம் தாக்கி வருகிறது. மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், வரிசையில் இப்போது காவல்துறையினரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் சென்னை அண்ணா நகர் காவல் துணை ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சென்னை பூக்கடை பகுதி காவல் உதவி ஆணையருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவருக்கு யார் மூலமாக நோய்தொற்று ஏற்பட்டது என்ற விவரம் வெளியாகவில்லை. பல இடங்களுக்கும் ரோந்து சென்றதால் யார் மூலம் தொற்று ஏற்பட்டது என்பதை இன்னும் சரியாக கண்டறியமுடியவில்லை.
இதனிடையே கொரோனா பாதிப்புக்கு ஆளான பூக்கடை காவல் உதவி ஆணையர் நலமுடனும், உடல் சமநிலையுடனும் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய மருந்துகளும், ஆகாரங்களும் வழங்கப்படுவதாக கூறினர். கடந்த ஒரு வாரமாக சென்னையை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் கொரோனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள முன் களப்பணியாளர்கள் அச்சத்திற்கும், கலக்கத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications