இப்படியா பேசுவது.. ஹீலர் பாஸ்கர் மீது பாய்கிறது வழக்கு.. அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டம்
சென்னை: கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்தி பரப்பும் ஹீலர்பாஸ்கர் என்பவருக்கு எதிராக உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்க்கலாம்.. மருத்துவ துறையை நம்பத் தேவையில்லை, என்ற கருத்தை வெளியிட்டு அந்த வீடியோ மூலமாக தமிழகம் முழுக்க பிரபலமானவர் ஹீலர் பாஸ்கர். அனைத்து வகை நோய்களுக்கும் எளிய முறையில் மருத்துவ சிகிச்சை இன்றி குணமடைய முடியும் என்பது, இவர் தொடர்ந்து வலியுறுத்தி வரக்கூடிய அம்சம்.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே உலுக்கி வரும் நிலையில், இதிலும் அவர் கருத்து தெரிவித்தார். ஆனால் அது சர்ச்சைக்குரிய கருத்தாக மாறிவிட்டது.

இலுமினாட்டிகள்
ஹீலர் பாஸ்கர் கூறுகையில், இது இலுமினாட்டிகள் செய்யக்கூடிய வேலை, சும்மா இருப்பவர்களை அதிகாரிகள் ஊசி போட்டுக் கொல்கிறார்கள், அரசு சொல்வதை கேட்க வேண்டாம் என்பது போன்ற கருத்துக்களுடன் அவர் வீடியோவை வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக, சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது.

விஜயபாஸ்கர்
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதிலளிக்கையில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அந்த வகையில் ஹீலர் பாஸ்கர் மீது காவல்துறை உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யும் என்று உறுதியாக தெரிவித்தார்.

ஆடியோ
ஹீலர் பாஸ்கரின் கொரோனா வைரஸ் தொடர்பான ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், சீனா, இத்தாலி மற்றும் ஜெர்மனி போன்ற மோசமான நிலை இந்தியாவிலும் ஏற்படும், இது மூன்றாம் உலகப் போர் போன்ற ஒரு செயல். சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாக சென்று மக்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

சட்டப் பிரிவுகள்
இந்த ஆடியோகளையும் சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் குமார் கூறுகையில், மாவட்ட கலெக்டர் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளோம். பொதுமக்களுக்கு பீதி ஏற்படுத்தும் எந்த ஒரு செயலிலும் ஈடுபடக்கூடாது. தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 54, பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 ஆகியவற்றின் கீழ் இது குற்றச் செயல் என்று தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications