புத்தாண்டு, கிறிஸ்துமஸுக்கு சிக்கல்: பல மாநிலங்களில் கட்டுப்பாடு- எந்தெந்த மாநிலங்களில் என்ன ரூல்ஸ்?
சென்னை: ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு புத்தாண்டு, கிறிஸ்துமஸ் விழாக்களை கொண்டாட பல்வேறு மாநிலங்களில் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு கேஸ் மட்டுமே பதிவாகி இருந்தாலும் மற்ற மாநிலங்களில் கேஸ்கள் உயர்ந்து வருகின்றன. இந்தியாவில் இதுவரை 213 பேருக்கு ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளது. டெல்லியில் 57 பேருக்கும், மகாராஷ்டிராவில் 54 பேருக்கும் இதுவரை ஓமிக்ரான் கேஸ்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் காரணமாக மக்கள் அதிக அளவில் வெளியே செல்லும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் கொரோனா கேஸ்கள் மேலும் அதிகரிக்கும். இது ஓமிக்ரான் பரவலை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இந்த விழாக்களுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேற்கு வங்கம்
அதன்படி மேற்கு வங்கத்தில் இரவு 11 மணிக்கு பின்பான லாக்டவுன் கட்டுப்பாடுகள் ஜனவரி 15 வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூடாமல் கண்காணிக்கப்படுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் அங்கு கேஸ்கள் குறைவாக உள்ளதால் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் அன்று மட்டும் இரவு நேர கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன.

டெல்லி
டெல்லியில் ஓமிக்ரான் கேஸ்கள் 57 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகள் வந்து கொண்டு இருக்கின்றன. புத்தாண்டு, கிறிஸ்துமஸை முன்னிட்டு கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதி வரை பார்கள், உணவகங்களில் 50 சதவிகித மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் பொது இடங்களில் கூட்டமாக புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் 54 பேருக்கு இதுவரை ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே மும்பையில் டிசம்பர் 31ம் தேதி வரை 144 போடப்பட்டுள்ளது. அதன்படி பொது இடங்களில் கூடவும், தனியாக கூட்டம் நடத்தவும், கடற்கரைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், நிகழ்வுகளில் 50 சதவிகிதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

குஜராத்
குஜராத்தில் புத்தாண்டு, கிறிஸ்துமஸை முன்னிட்டு இரவு நேர லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 வரை இரவு நேர லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கு 11 ஓமிக்ரான் கேஸ்கள் இதுவரை பதிவாகி உள்ளது. ஜிம்கள், உணவகங்கள் 75% மக்களுடன் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

கர்நாடகா
கர்நாடகாவில்தான் இந்தியாவில் முதலில் ஓமிக்ரான் கண்டறியப்பட்டது. அங்கு எம்ஜி ரோட் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிறிஸ்துமஸ் கொண்டாட இதுவரை கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை கடுமையான கட்டுப்பாடுத்கள் அமலில் இருக்கும். பார்கள், உணவகங்கள் 50 சதவிகித மக்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications