ஒரே நாளில் 50 பேர்.. சென்னையில் படுதீவிரம் எடுத்த கொரோனா.. 285 பேருக்கு பாதிப்பு.. என்ன நடந்தது?
சென்னையில் மட்டும் 50 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் மட்டும் 50 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. இன்று தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரிப்பு.
இன்று மட்டும் 46 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் 411 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் யாரும் கொரோனா காரணமாக பலியாகவில்லை.

ராயபுரத்தில் அதிகம்
சென்னையில் ராயபுரத்தில்தான் அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரத்தில்தான் சென்னையில் அதிகமாக 73 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இது நேற்றைய கணக்குதான். இன்று சென்னையில் பாதிக்கப்பட்ட 50 பேரில் எத்தனை பேர் ராயபுரத்தில் இருந்து பாதிக்கப்பட்டார்கள் என்று விவரம் வெளியாகவில்லை. ராயபுரத்தில் கேஸ்கள் வரும் நாட்கள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேறு அதிகமாக உள்ள இடங்கள்
ராயபுரத்திற்கு அடுத்தபடியாக திரு.வி.க நகரில் மொத்தம் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கோடம்பாக்கம் மற்றும் தண்டையார்பேட்டையில் 26 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதேபோல் அண்ணா நகரில் 24 பேருக்கும், தேனப்பேட்டையில் 19 பேருக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது. இதுதான் சென்னையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் ஆகும்.

அதிர்ச்சி செய்தி
ஆனால் இன்று இந்த பகுதிகளில் மேலும் பலருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கலாம் என்கிறார்கள். இன்று சென்னையில் கொரோனா தாக்கிய 50 பேர் எந்த மண்டலத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரத்தை இன்னும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிடவில்லை. சென்னையில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 4 மருத்துவர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் 3 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மிக மோசமான நிலை
அதேபோல் சென்னையில் இன்று 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு இதனால் சென்னையில் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இப்படி கொரோனா தீவிரமாக பரவ காரணம் மோசமான ஊரடங்குதான் காரணம் என்கிறார்கள். கடந்த சில நாட்களாக சென்னையில் மக்கள் சரியாக ஊரடங்கை கடைபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. முக்கியமாக சென்னையில் சரியாக காண்டாக்ட் டிரேசிங் செய்யப்படவில்லை என்றும் புகார் உள்ளது.

அறிகுறி இல்லை
அதேபோல் சென்னையில் இன்று பாதிக்கப்பட்ட 50 பேரில் 22 பேருக்கு அறிகுறியே ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இப்படி அறிகுறி இல்லாமல் கொரோனா பரவுவது மிகவும் ஆபத்தானது ஆகும். அறிகுறி இல்லாமல் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்துவம், அதை கண்டுபிடிப்பதும் மிகவும் கடினம் ஆகும். இதுதான் சென்னையில் வேகமாக கொரோனா பரவ காரணம் என்று கூறுகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications